புதன், 9 ஜூலை, 2014

மவுலிவாக்கம் இடுபாட்டு அழுகுரல் ஓயுமுன்பே அரசிக்கு புகழ்பாடும் பாராட்டு விழா ! டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம்.

சென்னை மவுலிவாக்கம் கட்டிட இடிபாட்டு முறைகேடுகளை மறைப்பதற்காகவே தமிழக அரசு தற்போது பாராட்டு விழா நடத்தியுள்ளது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். சேலம் மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர்,சென்னை மவுலிவாக்கம் 11 மாடி கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தாரின் அழுகுரல் ஓய்வதற்கு முன்பாகவே, மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு தமிழக அரசு பாராட்டு விழா நடத்தியது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஊழ-ல் அதிகாரிகளுக்கு பங்கு இருக்கிறது என்றார்.

கடந்த மாதம் 28 ஆம் தேதி சென்னை மவுலிவாக்கத்த்தில் 11 மாடி கட்டிட விபத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை ஜெயலலிதா வழங்கினார். நேரு உள்விளையாட்டு அரங்கில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், தீயணைப்புத்துறை, காவல்துறை, தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தமிழ்நாடு ஊர்காவல் படையினர் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 3 ஆயிரத்து 750 பேருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.nakkheeran.in

கருத்துகள் இல்லை: