சனி, 30 மார்ச், 2013

ஸ்டெர்லைட் ஆலையை மூட மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு மாசு
கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 23.03.2013 அன்று விஷவாயு வெளியேறியதால், பல அயிரம் பேருக்கு மூச்சுத்திணறல் எற்பட்டது. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதையடுத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்ததையடுத்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: