வியாழன், 28 மார்ச், 2013

ரஜினி, கமல் படங்களுக்கு இளையராஜா இசையமைக்கவில்லை. நஷ்டம் அவர்களுக்கே

“ரஜினியும் கமலும் தற்போது நடிக்கும் படங்களுக்கு ‘இளையராஜாவின் இசை சரியாக இருக்காது’ என்று கணித்திருக்கலாம். ஆனால் அது தவறு என்று அவர்களுக்குத் தெரியாது. ஏனென்றால், நான் எந்தப் படத்திற்கு எந்த இடத்திற்கு எந்த மாதிரி இசையமைப்பேன் என்று என்னாலேயே கணிக்க முடியாது” என்று அதிரடியாக கூறியிருக்கிறார் இளையராஜா.
ரஜினி, கமல் நடித்த அதிகபட்ச படங்களுக்கு இசை அமைத்தவர் இளையராஜா. ஆனால் ரஜினி கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்த ‘வள்ளி’ படத்துக்கு பிறகு, இருவரும் இணையவில்லை. அதேபோல, கமல் இயக்கி நடித்த ‘விருமாண்டி’க்குப் பிறகு கமல் படங்களுக்கு இளையராஜா இசையமைக்கவில்லை.
இதுபற்றி வார இதழ் ஒன்றில் வாசகர் கேள்விக்கு, இளையராஜா அளித்துள்ள பதிலே, நெத்தியடியாக அமைந்துள்ளது.
இளையராஜா, “என்னை வைத்துதான் இசையமைக்க வேண்டும் என எங்களுக்குள் எந்த ஒப்பந்தமும் கிடையாது. ஏன் அப்படி யாரிடமும் ஒப்பந்தம் போட்டது இல்லை. அவர்கள் இந்தப் படத்திற்கு இளையராஜாவின் இசை சரியாக இருக்காது என்று கணித்திருக்கலாம்.

ஆனால் அது தவறு என்று அவர்களுக்குத் தெரியாது. காரணம், நான் எந்தப் படத்திற்கு எந்த இடத்திற்கு எந்த மாதிரி இசையமைப்பேன் என்று என்னாலேயே கணிக்க முடியாது. பிறகு எப்படி மற்றவர்களால் அதை கணிக்க முடியும்?
எனக்கு இந்த இசைதான் தெரியும் என்று யாரும் லேசில் எடை போட வேண்டாம். ஏனென்றால் எந்தக் காலத்துக்குள்ளும் என் இசை அடங்காது. என்னை வேண்டாம் என்பது அவர்கள் இஷ்டம். அதனால் நஷ்டம் அவர்களுக்கே. ஆனால் காலாகாலத்திற்கும் நின்றிருக்கும், நிலைத்திருக்கும் என் இசை” என்று பதில் கொடுத்தருக்கிறார்.

கருத்துகள் இல்லை: