புதன், 14 அக்டோபர், 2020

அமமுக பொருளாளர் வெற்றிவேல் கவலைக்கிடம்.. கொரோனோ தொற்றால்..

வெற்றிவேல்
Manikandaprabu S | Samayam  : கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்ட அமமுக பொருளாளர் வெற்றிவேல் கவலைக்கிடமாக உள்ளார்கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வந்த பொது முடக்கத்தில் தற்போது பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், கொரோனவைன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.   ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் கொரோனா முழுவதுமாக குறைந்து விட்டதாக மக்கள் எண்ணுவதும் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. கொரோனாவைத் தடுக்கும் பணியில் முன்னணியில் நிற்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோரும் தன்னார்வலர்கள், அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோரும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

அந்த வகையில், அமமுக பொருளாளர் வெற்றிவேலுக்கு கொரோனா பாதிப்பு சில தினங்களுக்கு முன்னர் உறுதி செய்யப்பட்டது. கொரோனோ தொற்றின் காரணமாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது.

இதன் காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெற்றிவேல் ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் என்பதால் அவரது ஆதரவாளர்கள் மற்றும் குடும்பத்தினர் வருத்தத்தில் உள்ளனர்.

கருத்துகள் இல்லை: