திங்கள், 29 ஜூன், 2020

தமிழகம் முழுவதும் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

BBC :தமிழ்நாடு முழுவதும் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்க நிலை ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நோய்ப் பரவல் அதிகமாக இருப்பதால், ஜூன் 19ஆம் தேதி முதல் முழுமையான ஊரடங்கு அமலில் உள்ளது.
 மதுரையில் ஜூன் 24ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு அனைத்தும் ஜூன் 30ஆம் தேதியோடு முடிவுக்கு வரும் நிலையில், ஊரடங்கு தொடருமென தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூலை 31ஆம் தேதிவரை தொடரும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரையின் பெரும் பகுதியில் ஜூலை 5ஆம் தேதி வரை முழுமையான ஊரடங்கு தொடரும். அதற்குப் பிறகு, தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ளதைப் போன்ற ஊரடங்கு இந்தப் பகுதிகளில் அமலில் இருக்கும். ஜூலை 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதிவரை மாவட்டங்களுக்குள் இயங்கிவந்த பொதுப் போக்குவரத்து வசதிகள் நிறுத்தப்படுகின்றன.

மேலும் ஜூலை 5, 12, 19, 26 தேதிகளில், அதாவது ஜூலை மாதத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில் தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் முழுமையான ஊரடங்கு அமலில் இருக்கும். தமிழ்நாட்டில் ஜூலை 31ம் தேதிவரை ஊரடங்கு தொடருமென மாநில அரசு அறிவித்துள்ளது

.hindutamil.in  : தமிழகத்தில் 5-வது கட்ட ஊரடங்கு முடிவடையும் நிலையில் 7-வது முறையாக மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனையைத் தொடங்கினார். இதில் தனிமைப்படுத்துதலில் இருந்த பிரதீப் கவுரும் கலந்துகொண்டார். தமிழகத்தில் கரோனா தொற்று பரவி வரும் நிலையில் மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அது தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டு ஐந்தாம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிகிறது. ஒவ்வொரு முறை ஊரடங்கு முடியும் முன்னர் ஆட்சியர்களுடனும், மருத்துவ நிபுணர்கள் குழுவுடனும் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துவது வழக்கம். அந்த வகையில் 7-வது முறையாக முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனையை நடத்தத் தொடங்கியுள்ளார் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஐசிஎம்ஆர் துணை இயக்குனர் பிரதீப் கவுருடன் 19 நிபுணர்கள், சுகாதாரத்துறை அமைச்சர், தலைமைச் செயலர், சுகாதாரத்துறைச் செயலர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இதில் கடந்த 15 நாட்களில் தமிழக நிலைமை, பரிசோதனை, நோய்த்தொற்று தடுப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் அலசப்படும்.

தமிழகத்தில் சமீபகாலமாக மாவட்ட அளவில் தொற்று வேகமாகப் பரவி வருவதும், சென்னையில் அதிகரித்து வரும் தொற்று, ஜூன் மாதத்தில் அதிகரித்த மரண எண்ணிக்கை, ஊரடங்கில் தளர்வு, கட்டுப்பாடு உள்ளிட்ட விஷயங்கள் குறித்துப் பேசப்படும் எனத் தெரிகிறது.
கடந்த 2 கூட்டங்களில் கலந்துகொள்ளாத ஐசிஎம்ஆர் துணை இயக்குனர் பிரதீப் கவுர் இந்தக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். தங்கள் குழுவுடன் முக்கியத் தகவல்களை பகிர்வதில்லை என அவர் சில நாட்களுக்கு முன் ட்விட்டரில் பதிவிட்டிருந்தது பரபரப்பானது. இந்நிலையில் இன்று அவரும் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்

கருத்துகள் இல்லை: