வெள்ளி, 3 ஜூலை, 2020

சாத்தான்குளம் .. மதவெறி ஜாதி வெறி அதிகார வெறி .. கொலைகளுக்கான மோடிவ் என்ன?

பெரிய அரசியல் புள்ளியின் அந்தரங்க ரகசியம் தெரிந்தவர்கள் இந்த இருவரும்
சாத்தான்குளம் கொடூரத்தின் பின்னணி:
* சாத்தான்குளம் ஊரில் கோனார்களும் உண்டு, நாடார்களும் உண்டு
* SI ஸ்ரீதர் கோனார் சாதியை சேர்ந்தவர். திவீர சாதிப்பற்று உடையவர்.
* நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வெளிப்படையாகவே தன் சாதிக்காக உழைத்திருக்கிறார். நாடார்கள் மீதான வெறுப்புக்கு உள்ளாட்சி தேர்தல் மேலும் தூபம் போட்டிருக்கிறது.
* கிறித்துவ நாடார்கள் மீதான வெறுப்பிற்கு தூபம் போட்டது சேவா பாரதி அமைப்பு.
* SI பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சேவா பாரதி அமைப்புடன் நெருக்கம் உள்ளவர்கள்.
* சாத்தான் குளம் காவல் நிலையத்திற்கு இன்பார்மர்களாக இருப்பவர்கள் இந்த சேவா பாரதி அமைப்பை சேர்ந்தவர்கள்தான்
* ஜெயராஜ் பென்னிக்சின் கொலைக்கு இருவாரங்களுக்கு முன், இந்த இன்பார்மர்களில் ஒருவரை நாடார்கள் நான்கு பேர் கொலை செய்துவிடுகின்றனர்.
* இதை விசாரிக்க பேய்க்குளம் போன ரகு, கொலையாளி என்று சந்தேகிக்கப்படும் நபரின் தம்பியை, காவல் நிலையத்திற்கு கூட்டிவந்து விடிய விடிய அடிக்கிறார். அதில் மூன்று நாள் கழித்து அந்த நபர் இறந்து விடுகிறார்.


* ஜூன் முதல் வாரத்தில், ரகு ஒரு பாதிரியாரை ஊரடங்கை மீறியதற்காக காவல்நிலையத்திற்கு கூட்டிவந்து அடி வெளுக்கிறார்
* ஊர்க்காரர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அனுப்புகின்றனர். ஒரு நடவடிக்கையும் இல்லை.
* ரகு நிலவரம் இப்படிப்போக, பாலகிருஷ்ணன் பென்னிக்சிடம் இலவசமாக மொபைல் கேட்டிருக்கிறார். அதற்கு பென்னிக்ஸ் முடியாது என்றிருக்கிறார்.
* மதவெறி, சாதிவெறி இரண்டும் சரியாக கலந்து இரண்டு கொலையில் முடிந்திருக்கிறது.

இரண்டு கொலைகளில் சேவாபாரதி சம்மந்தப்பட்டிருப்பதால், முதல்வர் முதற்கொண்டு அனைவரும் இந்த வழக்கை ஊத்திமூட துடிக்கின்றனர்.
  நன்றி ..முகநூல் பதிவர் -

கருத்துகள் இல்லை: