வெள்ளி, 29 மே, 2020

வடக்கு புலிகளால் கோழைத்தனமாக கொல்லப்பட்ட லெப். கேணல் நீலாவினி ...மட்டக்களப்பு , அம்பாரை மவாட்ட தளபதி

Reginold Rg : இந்தநாளில் புலிகள் மேற்கொண்ட கொடூரங்களை வரலாறு என்ன நிபந்தனையுடன் இலகுவாக மன்னித்துவிட்டது என்ற கேள்வியுடன் சிலரது மனச்சாட்சியின் கதவுகளை தட்ட முயற்சிக்கின்றேன்....
இந்த பெண் போராளி யார் என்று தெரிகிறதா வீரம் விளைநிலம் ஈன்றெடுத்த மட்டு மண்ணின் புதல்வி நீலாவினி மட்டு அம்பாரை மவாட்ட தளபதி
தங்களது இளமைக் காலத்தில் உறவுகளை மறந்து, சராசரி மனிதன் அனுபவிக்கும் அத்தனை சுகபோகங்களையும் துறந்து தமிழ் மக்களின் எதிர்கால நலன் என்ற ஓர் இலக்கை நோக்கி பயணிப்பதற்காக போராடப் புறப்பட்டவள் கிழக்கு போராளிகளின் உரிமைகள் மறுக்கப்பட்ட போது கிளர்ந்தெழுந்தவள் யுத்தம் வேண்டாம் எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள் நாங்கள் ஜனநாயக பாதைக்கு செல்கிறோம் வழி விடுங்கள் என்று கேட்ட பெண் போராளிகளை பெண் என்று கூட பார்க்காமல் புலிகள் கொலை செய்த வரலாறும் இருக்கிறது பெண்மையை போற்றும் நீங்கள் எதற்காக இந்த அப்பாவி அவலைப் பெண்ணை கொலை செய்திர்கள் உங்களுக்கு மனசாட்சி இல்லையா நீங்கள் தமிழர்கள்தானே
புலி தலைவரே நீங்கள் நினைத்து இருந்தால் உங்களிடம் சரணடைந்த நான்கு பெண் போராளிகளையும் விடுதலை செய்து இருக்கலாம் தானே உங்கள் மேல் நாங்கள் வைத்திருந்த நம்பிக்கை வெறும் கனவாகி விட்டாதே அன்று நீங்கள் செய்தது பெரும் துரோகம் .


எங்கள் பெண் போராளிகளை கொலை செய்தது பெரும் தவறு காலம் உங்களுக்கு பதில் சொல்லிவிட்டது என்ற திருப்தியில் மட்டக்களப்பில் இருந்து ஒரு சாமானியனின் By . Reginold


ஒன்றாக உணவருந்தி ஒன்றாகவே படுத்துறங்கிய சொந்த போராளிகள் என்று கூட பார்க்காமல் உணவில் சயனைட் கலந்து கொடுத்து கொலை செய்தது நியாயமா ?
வடக்கு பகுதியினர் பெருன்பான்மையோர் வெளிநாடுகளுக்கு ஓட, கிழக்கு போராளிகள் வடக்கு நோக்கி ஈழ விடுதலை கனவுடன் பிரபாகரனை நோக்கி ஓடினர். அதற்க்கு பிரபா கொடுத்த பரிசு இந்த 700 மேற்பட்ட போராளிகள் நயவஞ்சகமாக படுகொலை செய்யப்பட்டது நீங்கள் யாரை வேண்டுமானாலும் கொலை செய்யலாம் அது தேசியம் உங்களை யாராவது கொலை செய்தால் அது துரோகம் என்பது மட்டும் என்ன நியாயம் ?
ஆம் கருணா பிளவின் போது புலிகள் தங்களை கொலை செய்து விடுவார்கள் என்ற பயத்தில் கொழும்பு புற நகர் பகுதியான கொட்டாவ பகுதியில் வெளிநாட்டு சொல்வதற்கா தங்கி இருந்த எமது போராளிகளை பாசிச புலிகள் உணவில் சயனைட் கலந்து கொடுத்து கொலை செய்த வரலாறும் இருக்கிறது எதிரி என்று சொல்லப்படும் சிங்களவன் கூட செய்யாத துரோகம் இது உங்களின் கண்களுக்கு அநீதியாக தெரியவில்லையா சர்வதேசத்தின் மேற்பார்வையில் இலங்கையில் சமாதானம் நிலைநாட்டி கொண்டு இருக்கும்போது எத்தனை அப்பாவி போராளிகளை கொன்றொழித்தீர்கள்
கிழக்கு மக்களும் கிழக்கு போராளிகளும் செய்த தியாகத்தை மறந்து வன்னியில் இருந்து சொந்த போராளிகளை கொலை செய்ய வென்று நீங்கள் என்று படை அனுப்பி நீர்களோ அன்றே தெரிந்து விட்டது இதுதான் புலிகளின் இறுதி அத்தியாயம் என்று புலிகள் செய்தது எல்லாமே சரி எண்டு நினைக்கும் சராசரி தமிழன் கூட்டதோட என்னை சேர்ர்துடாதிங்க

By. Reginold Reginold Rgi : கருணா இலங்கை அரசுடன் கைகோர்க்க காரணம் புலிகள்தான் வன்னியில் இருந்து ஏன் படை எடுத்து வந்து எங்கள் போராளிகளை கொலை செய்ய வேண்டும் கருணா பிளவின் போது புலிகளால் கொல்லபட்ட போராளிகளின் விபரங்களை தருகிறேன் இவர்களுக்கான நீதியை யாரிடம் கேட்பது
வெருகல் அற்றங்கரைல் வைத்து ஒரே நாளில் 210 போராளிகள் கொலை செய்யபட்டார்கள் இவர்களின் கொலை உங்கள் கண்களுக்கு அநீதியாக தெரியவில்லையா ?
வெளிநாடு செல்வதற்காக கொழும்பு கொட்டவா பகுதியில் தங்கி இருந்த குகணேசன் உற்பட 9 போராளிகளுக்கு உணவில் சயனைட் கலந்து கொடுத்து சொந்த போராளிகளை கொலை செய்தது துரோகம் இல்லையா ?
கருணாவின் சகோதரன் றெஜி துமிலன் உற்பட 3 பேரை நித்திரையில் வைத்து சுட்டு கொலை செய்திர்கள் இது துரோகம் இல்லையா ?
முக்கிய கிழக்கு தளபதிகள் பொறுப்பாளர்கள் 63 பேரை குறிப்பாக ராபேட் ,தாத்தா ,விசு , துரை , வரிசையாக நிற்க வைத்து சுட்டு கொன்றிர்களே இது துரோகம் இல்லையா ?
மட்டு அம்பாறை மகிளிர் அணி தளபதி சாளி உற்பட 4 பெண் போராளிகளை பெண் என்று கூட பார்க்காமல் சுட்டு கொன்றார்களே இது உங்கள் கண்களுக்கு துரோகம் இல்லையா ?

மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்  கிங்ஸ்லி  ராஜநாயகம்  , ராஜன் சத்திய மூர்த்தி , மட்டக்களப்பு அரச அதிபர்  ( கலெக்டர்) கிழக்கு
இப்படி எண்ணற்ற புத்திஜீவிகளை கொன்றொழித்தர்கள் இது துரோகம் இல்லையா ?
ஒன்றும் அறியாத எனது சகோதரனை கொலை செய்தார்களே இது துரோகம் இல்லையா? ?
இப்படி எண்ணற்ற கிழக்கு போராளிகள் அன்று புலிகளால் மட்டக்களப்பு மாவட்டம் எங்கும் தேடி தேடி வேட்டையாட பட்டார்கள் வேறு வழி இல்லாமல் தான் ஸ்ரீலங்கா அரசுடன் இணைந்து செயல் பட தொடங்கினார்கள்.

கருத்துகள் இல்லை: