செவ்வாய், 26 மே, 2020

பொருளாதார துறையில் சாதிய அடக்குமுறை கண்ணுக்கு தெரியாதவண்ணம் நடைபெறுகிறது


Karthikeyan Fastura : · மெய்ப்பொருள் youtube சானலில் இன்டெர்வியூ கொடுக்கும்போது இந்த பகுதியை தூக்கிடுவாங்கன்னு நினைத்தேன். தனியாக ஒரு விடியோவா போட்டிருக்காங்க. பொருளாதார துறையில் மிகப்பெரிய அளவில் சாதிய அடக்குமுறை கண்ணுக்கு தெரியாதவண்ணம் நடைபெறுகிறது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் தான். அதற்கு அடுத்த இடத்தில் தான் ஒடுக்கப்பட்ட மக்கள் வருகிறார்கள். பழங்குடியினர் இதில் இல்லவே இல்லைன்னு சொல்லலாம். பார்ப்பனர்கள், வட இந்திய பனியாக்கள் எப்படியெல்லாம் நிதி அதிகார மட்டத்தில் கோலோச்சுகிறார்கள். அவர்களை தவிர பிறருக்கு எந்த வாய்ப்பும் கொடுக்காமல் ஏமாற்றுகிறார்கள் என்று இந்த வீடியோவில் பேசியிருப்பேன் இன்னமும் தெளிவாக பட்டவர்த்தனமாக சொல்வதென்றால் பிற்படுத்தப்பட்ட சமூகமோ, ஒடுக்கப்பட்ட சமூகமோ "இன்னொரு அம்பேத்கார் தோன்றிவிடக்கூடாது" என்பதில் நிதி அதிகாரமட்டத்தில் இருக்கும் பார்ப்பன பனியா கூட்டம் தெளிவாக வேலைபார்க்கிறது. இதை பேசுவதற்கு எந்த கட்சியும் தயாராக இல்லை என்பதே வருத்தம் கொள்ளவைக்கிறது.

கருத்துகள் இல்லை: