வியாழன், 17 ஆகஸ்ட், 2017

லதா ரஜினியின் ஆஸ்ரம் பள்ளி மூடப்பட்டது ஏன் ? சிஸ்டம் சரியில்லையா ரசனி ?

துறவறத்தின் குறியீடான “ஆஸ்ரம்” தான் அம்மையாரின் பள்ளியின் பெயரும் கூட. அதனால் மற்ற பள்ளிகளை விட பணத்தை அதிகம் இங்கே துறக்க வேண்டும்.
கோடிக்கணக்கில் வருவாயைக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த் “சிஸ்டம் சரியில்லை” என்று அரசியல் சூழல் குறித்து குறைபட்டுக் கொண்டார். தேவைப்பட்டால் சிஸ்டத்தை மாற்ற போருக்கு வருவேன் என்றார். பிறகு காலா, எந்திரன் 2.0 படப்பிடிப்புகளில் கலந்து கொண்டார். நல்ல விளம்பரமும் கிடைத்தது.
அன்னாரின் துணைவியார் “பாபா” படம் வெளிவரும் போதே பாபா டாலர் எனும் செயினைக் கூட ரசிகர்களுக்கு விற்க முயன்ற முதலாளி. டாலரை விட கல்வித் தொழிலில் நிறைய வருமானம் வருமென்பதால் இரண்டு பள்ளிகளை நடத்தி வருகிறார். துறவறத்தின் குறியீடான “ஆஸ்ரம்” தான் அம்மையாரின் பள்ளியின் பெயரும் கூட. அதனால் மற்ற பள்ளிகளை விட பணத்தை அதிகம் இங்கே துறக்க வேண்டும்.

கிண்டியில் இருக்கும் ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஏற்கனவே ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும், ஓட்டுநர்களுக்கும் பல மாத சம்பள பாக்கி வேலை நிறுத்தம், போராட்டம் என்று நடந்திருக்கின்றன. அந்த செய்திகளை ஊடக பலத்தால் அமுக்கிவிட்டு இன்றும் பள்ளி நடக்கின்றது.
இந்நிலையில் கிண்டி பள்ளிக்கூடம் இருக்கும் கட்டிட உரிமையாளரை ஏமாற்றிய கதை தற்போது வெளியேவந்திருக்கிறது. அம்மையார் 2009 -ம் ஆண்டு முதல் பள்ளிக் கட்டிடத்திற்கு வாடகையே கொடுக்கவில்லையாம்.
இது தொடர்பாக கட்டிட உரிமையாளர் வெங்கடேஸ்வரலு பள்ளிக்கூடத்தை பூட்டிவிட்டார். வரவேண்டிய வாடகை பாக்கி ரூபாய், பத்து கோடியாம். நீதிமன்றத்தில் வழக்கு போட்ட போது அம்மையார் 2 கோடி தருவதாக ஒப்புக் கொண்டு அதையும் தராமல் இழுத்தடித்தனராம். ஆகவே பூட்டு போட்டார் உரிமையாளர்.
இது ஒரு சுரண்டல், காரணமில்லாமல் வாடகையை ஏற்றியதே பிரச்சினை என்று கூறுகிறது அம்மையார் தரப்பு. கை, கால்களை ஆட்டாமலேயே நடனம், சண்டை, நடிப்பின் மூலம் படத்துக்கு படம் கோடிகளை கூட்டிக் கொண்டே போகும் சூப்பர்ஸ்டாரின் குடும்பம், பள்ளிவாடகையை கூட்டக் கூடாது என்று நியாயம் பேசுகிறது.

கருத்துகள் இல்லை: