செவ்வாய், 28 நவம்பர், 2017

அம்ருதா: ஜெ.ஜெயலலிதாவின் மகளாகிய நான் ? மக்கள் கருத்துக்கள் : முகச்சாயல் அப்படியே ...? DNA சோதனைக்கு அனுமதி அளிக்கலாமே.!

கண்மணி கன்னியாகுமரி - தமிழ்நாடு,இந்தியா : கண்மணி கன்னியாகுமரிஎம்.ஜி.ஆர். உயிரோடு இருந்த காலகட்டத்தில் அ.தி.மு.க.வின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த ஜெயலலிதா பிரசவத்திற்காக அமெரிக்கா சென்று பெண்குழந்தை பெற்றதாகவும், அதன்பிறகு அந்த குழந்தை ஜெயலலிதாவின் உறவினர்கள் பராமரிப்பில் வளர்ந்து வந்ததாகவும், 18 வயது நிரம்பியபிறகு ஜெயலலிதாவிற்கு எழுதிய கடிதமும் வாரப்பத்திரிகை ஒன்றில் அப்போது வெளிவந்தது. இவர் ஒருவேளை அந்த குழந்தையாக இருப்பாரோ? எதற்கும் தீர விசாரிப்பது நல்லது...

Only Real No politics - Chennai,இந்தியா : மர்மத்தாயின் விஷயத்தில் எதிலையுமே வெளிப்படை தன்மை இல்லை அதற்கு வலு சேர்க்கும் விதமாக நீதிமன்றங்களும் மனுக்களை தள்ளுபடி செய்து மர்மத்தை பாதுகாத்து வருகின்றன, இவருடைய மனுவை விசாரித்து DNA பரிசோதனை நடத்துவதனால் நீதிமன்றத்துக்கு என்ன பிரச்னை. ஒருவர் தன்னை பெற்றவர் யார் என்று தெரிந்து கொள்வது அவரது கடமை இதற்கு நீதிமன்றம் தடை போடுவது சட்டத்திற்கு புறம்பானது. ஜெயா இவருக்கு அம்மா இல்லை என்றால் இவருடைய உண்மையான அம்மா யார் இந்த லாஜிக்கையாவது நீதிமன்றம் விசாரிக்க வேண்டாமா, உடனே தள்ளுபடி என்ன டா நடக்குது நாட்ல, நீதிபதிகளே நீதியின் பக்கம் நில்லுங்கள் கவர்னர் பதவிகளுக்காக ராஜவிசுவாசம் வேண்டாம்..........


Malick Raja - jeddah,சவுதி அரேபியா : Malick Raja தீர விசாரிக்கப்படவேண்டிய ஒன்று .. நீண்ட நெடுங்காலமாக மறைவாகவே மறைவில் இருந்த உண்மை வெளிவர வாய்ப்புள்ளது ஏன் நீதிமன்றம் DNA. சோதனைக்கு அனுமதி அளிக்கவில்லை நீதிமன்றத்தின் வேலை நீதியை நிலைநாட்டவே அன்றி எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற பாணியில் இருக்க கூடாது .. உடனடியாக அப்போல்லோ மருத்துவமனையிலிருக்கும் ஜெயா அவர்களின் மாதிரி குருதியை வைத்து இணைத்துப் பார்த்தாலே உண்மை வரும் .. தாய் ஜெயா என்றால் தகப்பன் எங்கே ? இதுவும் புதிர்தானோ ? தமிழகத்திற்கு தலைகுனிவல்ல தனிப்பட்டவர்களுக்கு மட்டுமே தலைகுனிவு
I
niyan - chennai,இந்தியா : உச்ச நீதி மன்றம் DNA சோதனை செய்ய சொல்லி இருக்க வேண்டும்... தன்னிச்சையாக எப்படி நீதி மன்றம் மனுவை தள்ளுபடி செய்யலாம்??? பணம் வாங்கி கொண்டு நீதி மன்றம் தள்ளுபடி செய்தது என்று நினைக்க தோன்றுகிறது....இந்திய நீதி துறை புரையோடி போய் இருக்கிறது..

pazhaniappan - chennai,இந்தியா : n ஜெயலலிதாவை பொறுத்தவரை எந்த விஷயத்திலும் ஒரு வெளிப்படைத்தன்மையோ ,நேர்மையோ இருந்ததில்லை . அது அவர் இருக்கும் வரை அவரது தனிப்பட்ட வாழ்க்கை தான் அவ்வாறு இருப்பதாக நினைத்துக்கொண்டு இருந்த தமிழக மக்களுக்கு ஜெயலலிதா இறப்புக்கு பின் அவரது பொதுவாழ்க்கையும் அதாவது அரசியல் வாழ்க்கையும் மர்மங்களும் ,நேர்மையற்றதாகவுமே இருந்திருக்கின்ன்றன, இப்படிப்பட்டவரை நாம் இவ்வளவு காலம் தலைவராக கொண்டிருந்தது துரதிர்ஷ்டவசமானது ,போதாக்குறைக்கு அம்மாவின் ஆட்சியை மீண்டும் நிலைநாட்டப்போவதாக தமிழகத்தை ஆளுகிற கொள்ளை கூட்டம் சொல்லிக்கொண்டிருப்பது வெட்க கேடானது, வேதனை அளிக்கிறது
Srinivasan Kannaiya - muscat ,ஓமன் : கடந்த, 1980 ஆக., 4ல், சென்னை, மயிலாப்பூரில் உள்ள ஜெயலலிதா வீட்டில், மஞ்சுளா பிறந்தார்' மாநகராட்சி பிறப்பு இறப்பு சான்று இதழில் என்ன பதிவாகி இருக்கிறது... அதில் அவசியம் அம்மா அப்பா பேர் பதிவாகி இருக்குமே... Niranjan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள் : nஊரை கொள்ளை அடித்து தன் வீட்டிலேயே பத்திர பதிவு நடப்பவர்களுக்கு மாநகராட்சி பிறப்பு இறப்பு சான்று இதழில் எல்லாம் ஒரு பிரச்சினையா என்ன?...  தினமலர் வாசர்கர்கள்

கருத்துகள் இல்லை: