சனி, 7 அக்டோபர், 2017

வன்னிய குல சத்திரியர், அய்யா கிருபாகரன். .. ஃப்ரெண்ட்ஸ் க்ளப்

Shankar.A : ஃப்ரெண்ட்ஸ் க்ளப்
பெயரே சிறப்பாக இருக்கிறதல்லவா… இதில் சேர வேண்டும் என்று உங்களுக்கும் ஆசை வருவது இயல்பு. சென்னை, சைதாப்பேட்டையில் இயங்கும் இந்த கிளப் உங்களையும் சேர்த்துக் கொள்ளும். ஆனால் சில நிபந்தனைகள் இருக்கிறது. நீங்கள் வன்னியராக இருக்க வேண்டும்.
சரி. நானும் ஒரு வன்னியர் என்று நினைத்தீர்கள் என்றால் அதுவும் உங்களை அந்த கிளப்பில் சேர்க்காது. வன்னியரிலேயே, படித்த, க்ரூப் 1 அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள், ஐபிஎஸ் அதிகாரிகள், துணை நிலை நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோர் மட்டுமே இந்த கிளப்பில் உறுப்பினராக முடியும்.
சரி. இதையெல்லாம் எதற்காக உங்களுக்கு சொல்ல வேண்டும் ? இந்த கிளப்பின் தலைவர் யார் தெரியுமா ? சமூக வலைத்தளங்களில் நீதிபதிகளை விமர்சனம் செய்பவர்களை கைது செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி, மகா கனம் பொருந்திய வன்னிய குல சத்திரியர், அய்யா கிருபாகரன்.
இதற்குமா நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வரும் ?

கருத்துகள் இல்லை: