சனி, 7 அக்டோபர், 2017

சவுதி மன்னராட்சி.. இஸ்லாமிய உலகின் ஒரு சாபக்கேடு...

 Arun Hemachandra  :  உலகிற்கே ஒரு பிழையான எடுத்துக்காட்டாக வாழ்கின்றார் சவுதி மன்னர் சல்மான். அவர் எங்கு சென்றாலும் விமானத்தில் இருந்து இறங்கவும், ஏறவும் தனது தங்கப் படிக்கட்டுக்களை எடுத்துச் செல்வார். ஐநா அறிக்கையின் பிரகாரம் தினமும் 22000 சுமார் பேர் சிறுவர்கள் உலகில் பட்டினியால் மரணிக்கின்றனர். தான் வாழும் மத்திய கிழக்கு நாடுகளிலேயே அன்றாடம் யுத்தத்தின் நிமித்தம் பல நூற்றுக் கணக்கானோர் கொல்லப்படுகின்றனர். வாழ வழியில்லாமல் தடுமாறுகின்றனர். இவர் பின்பற்றும் மார்க்கம் வீண் விரயத்தினைக் கடுமையாக எதிர்க்கின்றது. இவ்வாறு இருக்கையில் இந்த ஆடம்பரம் தேவை தானா ? அண்மையில் மொஸ்கோ சென்ற வேளையில் இவரது இயந்திர தங்கப் படிக்கட்டுக்கள் செயலிழந்தமை காரணமாக தாமாகவே படிகளால் இறங்கி வர நேர்ந்தமை குறிப்பிடத்தக்கது. சவுதி மன்னராட்சி.. இஸ்லாமிய உலகின் ஒரு சாபக்கேடு...

கருத்துகள் இல்லை: