
இதையடுத்து, கேளிக்கை வரியை ரத்துசெய்ய வேண்டும், திரையரங்கக் கட்டணங்களை முறைப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அக்டோபர் 6ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்களை வெளியிடுவதில்லை என முடிவெடுத்து அறிவித்தது.
அதன்படி, இன்று புதிய திரைப்படங்கள் ஏதும் வெளியாகவில்லை. கடந்த சில வாரங்களில் வெளியான கருப்பன், ஹரஹர மஹாதேவகி, ஸ்பைடர் (தமிழ், தெலுங்கு), துப்பறிவாளன், மகளிர் மட்டும் ஆகிய படங்களே திரையரங்களில் ஓடிக்கொண்டிருக்கின்றன.
அறிமுகப்படுத்தப்பட்டதை எதிர்த்து இன்று புதிய திரைப்படங்கள் ஏதும் வெளியாகவில்லை. இதனால், கடந்த வாரம் வெளியான திரைப்படங்களே இந்த வாரமும் திரையிடப்பட்டுள்ளன.
தயாரிப்பாளர் சங்க அறிவிப்பையடுத்து சோலோ தவிர்த்த பிற படங்களின் வெளியீடு நிறுத்தப்பட்டது.
தமிழிலும் மலையாளத்திலும் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்க, பிஜோய் நம்பியார் இயக்கத்தில் தயாரிக்கப்பட்ட சோலோ திரைப்படம் மட்டும் வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.
ஆனால், இன்று காலை காட்சிக்கு சென்றபோது பழைய படங்களே திரையிடப்படுவதாகவும் விரும்பாதவர்களுக்கு கட்டணம் திருப்பியளிக்கப்படுமென்றும் திரையரங்கங்களில் தெரிவிக்கப்பட்டது.
தீபாவளிக்கு இன்னும் இரு வாரங்களே இருப்பதால், இந்த வாரத்தில்தான் நிறைய படங்கள் வெளியாகவிருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக