சனி, 2 செப்டம்பர், 2017

தோழர்களே .. வீரவணக்கங்கள் வேண்டாம். வீதிக்கு வாருங்கள் .. தமிழகமெங்கும் கொந்தளிப்பு!

JALLIKATTU-Veeravilaiyattu · மாணவர்கள் அண்ணா சாலையில் போராட்டத்தில்
இறங்கி உள்ளனர்! மதுரையிலும் போராட்டம் துவங்கி உள்ளது! திருவாரூர் மாணவர்கள் மதியம் முதலே போராட்டம் துவங்கி விட்டனர்! நாளை :- மதுரை பாஜக அலுவலகம் முற்றுகை! தஞ்சை இரயிலடி போராட்டம் துவக்கம்! திருச்சி - நாளை முதல் கால வரையற்ற உண்ணாவிரத போராட்டம்! மேலும் மற்ற ஊர்களின் தகவல்களை தோழர்கள் பகிரவும் update செய்து கொள்ளலாம்!

விதைகள் நாளை காலை 9 மணியளவில் காரைக்குடி ஆரியபவனிடம் தங்கை அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும்.கையாளாகாத மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் அனைத்து கட்சிகள் மற்றும் இயக்கங்களால் நடத்தப்படும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. உணர்வுள்ளோர்கள் ஒன்று  கூடுவோம்.
விதைகள் துணை நிற்போம் தோழர்களே... சென்னையில் பாஜக அலுவலகம் முற்றுகை. செப்டம்பர் 3, 2017 ஞாயிறு காலை 10 மணி 1176 மதிப்பெண் எடுத்து, நீட் தேர்வினை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்திய மாணவி அனிதா மரணம் பார்ப்பன பாஜக அரசின் பச்சைப் படுகொலை. தமிழக மாணவர்களை வஞ்சித்த பாஜக எடுபிடி அதிமுக அரசே! பதவி விலகு! கல்வி உரிமை மாநிலத்திற்கே சொந்தம். இந்திய அரசே! ஒற்றைக் கல்வி முறை என்ற பெயரில் பார்ப்பனியத்தை திணிக்காதே. 196.75 கட் ஆஃப் எடுத்த அனிதாவுக்கு மருத்துவக் கல்வி இல்லையென்றால் என்னங்கடா உங்கள் நியாயம்? பார்ப்பன CBSE படித்தவனுக்குத்தான் மருத்துவக் கல்வி என்றால் மருத்துவக் கல்லூரிகளை இழுத்து மூடு. - மே பதினேழு இயக்கம்

கருத்துகள் இல்லை: