வியாழன், 31 ஆகஸ்ட், 2017

விண்ணில் பாய்ந்த ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., செயற்கைக்கோள் தோல்வி

சென்னை: விண்ணில் பாய்ந்த ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., செயற்கைக்கோள் தோல்வி அடைந்தது
இயற்கை பேரிடர் காலங்களில் தரை, வான் மற்றும் கடல் வழி பயணத்திற்கு வழிகாட்டும் 'ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., - 1 எச்' என்ற அதிநவீன செயற்கைக்கோள் இன்று( ஆக.31) இரவு 7:00 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., விண்வெளி திட்டத்தின் கீழ் ஏற்கனவே ஏழு செயற்கை கோள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான 'இஸ்ரோ' விண்ணில் செலுத்தி உள்ளது. அதன்படி 'ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., - 1 எச்' என்ற செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி., சி- 39 ராக்கெட் மூலம் திட்டமிட்டபடி ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இரவு 7 மணியளவில் விண்ணில் பாய்ந்தது. அதன் பின்னர் தொழில் நுட்ப கோளாறுகாரணமாக தோல்வி அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்ரோ தலைவர் கிரண்குமார் விளக்கம்: செயற்கை கோளுக்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த வெப்ப தடுப்பு சரியாக பிரியாததால் விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கை கோள் தோல்வி அடைந்ததாக இஸ்ரோ தலைவர் கிரண்குமார் விளக்கம் அளித்துள்ளார். தினமலர்

கருத்துகள் இல்லை: