வெள்ளி, 1 செப்டம்பர், 2017

தேசிய உணர்வு மயிர் கூச நிற்கும் டுபாக்கூர்கள் ஆட்சி நடக்கிறது .

By Elango Kallanai
எதையும் மறக்காமல் மக்கள் இருந்தால் மோதி மாதிரி வாய்ச் சவடால் வீரர்களை நாம் பிரதமராக அடைந்திருக்க மாட்டோம். மோதி பிரதம வேட்பாளர் ஆனா கதையே அசிங்கமானது. அதிலும் அருண் ஜெட்லி போன்ற ஜே என் யூ இழி பிறவியின் வேலை அருவருப்பானது. வலதுசாரிகளின் தீவிர முகமாக அவர் உருவாக்கப்பட்டார்.
ஸ்கில் இந்தியா என்று துவக்கினார்கள். நாட்டில் பெரும் வேலைப் பஞ்சத்தை போக்குவோம் என்று. அவர்கள் சொல்ல வந்தது என்னவென்றால் திறன்கள் இல்லாததால் தான் வேலை வாய்ப்புக்களை உருவாக்க முடியவில்லை என்று. ஆனால் வேலையே உருவாக்கப்படவில்லை. ஸ்கில் இந்தியா சம்பந்தமான ஒரு ப்ராஜக்டில் தொக்குப்புப் பனி செய்தேன். அதன் பாடத் திட்டங்களின் அடிப்படையில் பிரிட்ஜ் மெக்கானிக் ஏசி மெக்கானிக் ஹாஸ்பிட்டாலிட்டி (விருந்தோம்பல் ) போன்ற துறைகளுக்கான பாடத் திட்டங்களை தொகுத்தார்கள். பல நிறுவனங்கள் இந்த தயாரிப்பில் இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளிலும் தயார் செய்தார்கள். ஆனால் பாருங்கள் இவர்கள் கொடுத்த சான்றிதழ்களோடு எவரும் வேலை பெற்றனரா என்று கேட்டால் பூஜ்யம் தான் விடை.

அடுத்து இவர்கள் செய்த இன்னொரு பித்தலாட்டம் மேக் இன் இந்தியா. இதுவரை எத்தனை நிறுவனங்கள் உருவாக்கி என்ன பணிகள் செய்யப்பட்டுள்ளன? அப்படி இந்தியா தயாரிக்கும் புதிய கார்கள் என்ன? அட காரை விடுங்க, தயாரிக்கும் புது கொசு மட்டை என்ன?
கல்வியில் வேலைவாய்ப்பு நோக்கத்தோடு கட்டாய தேர்ச்சி முறை ஒழிக்கப்பட்டு மாணவர்களை தொழிழ்களுக்குள் அதாவது குழந்தைத் தொழிலார தயாரிக்கும் நிறுவனங்களாக பள்ளிகளை மாற்றுவோம் என்றார்கள். அதன் பின்னர் நீட்டும் வந்துவிட்டது.
அடுத்து பணமுடக்கு. அது ஒரு பெரும் ஊழல் கிடங்கு என்று தான் பொருளாதார நிபுணர்கள் சொல்கிறார்கள்.
சவச் பாரத் என்று ஏதோ சொன்னார்கள். இன்னும் கார்ப்பரேசன்கள் தான் சுத்தம் செய்கின்றன. அதற்கு நம்மிடம் வாங்கப்பட்ட செஸ் வரி எதற்கு என்று இன்று வரை விடையில்லை.
அடுத்து GST. விற்பனை வரி உற்பத்தி வரி தவிர்த்து தொழிற்துறைக்கு எதுவுமே செய்யாமல் இடையில் வந்து பிடுங்கித் தின்னும் வேலையைத் தவிர இதுவரை இந்த அரசு என்ன செய்துள்ளது என்று தெரியவில்லை.
இப்போது விழித்துக் கொண்ட அண்ணா ஹசாறேக்கள், இன்னொரு நாடகத்திற்கு தயாராகிறார்கள். ஸ்லீப்பர் செல்கள் களத்தில் இறங்குகிறார்கள் கவனம்.
ஆக கல்வி பொருளாதாரம் தொழில்கள் என்று எல்லா முனைகளிலும் தோல்வி தான். இதில் அவ்வப்போது தேசிய உணர்வு மயிர் கூச நிற்கும் அசடுகள் வேறு.
மக்களிடம் அதிக வசூல் செய்து இதுவரை எந்த நலத் திட்டமும் செயல்படுத்த முடியாத முதல் அரசு இது தான்.
ஏன் மோதியை எதிர்க்கிறீர்கள் என்பவர்களுக்கு. அவ்வப்போது நினைவூட்ட்ட வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது.
அதனால் இப்போது வரிசைப்படுத்தியுள்ள திட்டங்களால் ஏதாவது நன்மை என்று யாராவது சொன்னால் காது கொடுத்துக் கேட்க தயராக உள்ளேன்.
மோதி போல பொய்த் தகவல்கள் இல்லாமல் இருந்தால் மட்டுமே பேச வேண்டும்.

கருத்துகள் இல்லை: