புதன், 2 ஆகஸ்ட், 2017

விவசாயியை வாழவைக்க குடும்பமாய் திரள்வோம் !

வருகின்ற ஆகஸ்ட் – 5, 2017 அன்று மக்கள் அதிகாரம் தஞ்சை நடத்தவிருக்கும் மாநாட்டை விளக்கி திருச்சி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்கள் முழுவதும் பிரச்சாரம் செய்யப்பட்டது.
விவசாயியை வாழவிடு ! விவசாயத்தின் அழிவு சமூகத்தின் பேரழிவு !  கடந்த ஒரு மாத காலமாக தெருமுனைக் கூட்டங்கள், பேருந்து, கடைவீதி, ஆட்டோ, வேன் பிரச்சாரங்கள் மூலம் பொதுமக்களை மாநாட்டிற்கு அழைக்கும்  விதமாக மக்கள் அதிகாரம் தோழர்கள் செயல்பட்டு வருகின்றனர். மாநாட்டு செலவுகளுக்காக மக்கள் நிதி அளிப்பதுடன், கட்டாயம் குடும்பத்துடன் கலந்து கொள்வதாகவும் தெரிவித்து வருகின்றனர்.மக்கள் அதிகாரம்,திருச்சி.

கருத்துகள் இல்லை: