திங்கள், 31 ஜூலை, 2017

இராணுவ கட்டுப்பாட்டில் கலாம் நினைவகம்! ( கலாம் மீம்ஸ் :அணுக்கதிர்களும் சாருமதி ராகமும் ?)

இராணுவ கட்டுப்பாட்டில் கலாம் நினைவகம்!கலாம் கையில் ஏதற்காக வீணை? ஆதாரம் இதோ.... இனிமே எவனாவது கேள்வி கேட்பீங்க?
 ராமேஸ்வரத்திலுள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்தில் செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க ராணுவ ஆராய்ச்சி கழகம் தடை விதித்துள்ளது. மேலும்
ஆட்சியரின் அனுமதி பெற்றே செய்தி சேகரிக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 27ஆம் தேதி முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் மணிமண்டபமும், சிலையும் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கலாம் சிலையருகே பகவத் கீதை புத்தகம் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பைபிளும், குரானும் நேற்று வைக்கப்பட்டு எதிர்ப்பு காரணமாக சிறிது நேரத்திலேயே அகற்றப்பட்டது. மேலும் திருக்குறள் புத்தகம் இடம்பெற வேண்டுமென்றும் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், கலாம் நினைவிடத்தில் செய்தி சேகரிக்க பத்திரிகையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இன்று( ஜூலை-31) ராணுவ ஆராய்ச்சி கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,'கலாம் நினைவிடத்தில், பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிக்க தடை விதிக்கப்படுகிறது. ஆட்சியரின் அனுமதி பெற்ற பிறகே செய்தி சேகரிக்க முடியும். மேலும் நினைவிடத்தில் மொபைல் போன் மற்றும் காமிரா பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: