வியாழன், 19 நவம்பர், 2015

நேபாள பிரதமர் இந்தியாவுக்கு கடும் கண்டனம்..மோடியின் சம்பாத்தியம்...இருந்த ஒரே நட்பு அயலானும் இனி....

காட்மாண்ட், நவ.17_ நேபாள நாட்டின் உள் நாட்டுப் பிரச்சினைகளில் இந்தியப் பிரதமர் நரேந் திர மோடி தலையிடுவது, கருத்துத் தெரிவிப்பது கண்டனத்துக்குரியது என்று நேபாள பிரதமர் ஓலே கூறியுள்ளார்.
நேபாளம் _ இந்தியா இரண்டும் வேறு நாடுகள், இரண்டு நாடுகளை ஒரு எல்லை பிரித்தாலும், இரண்டு நாட்டின் அரசி யலமைப்புகள் வேறு. எங்கள் நாட்டின் அரசிய லைப்புப் பற்றி ஆலோ சனை கூறவோ மக்களைத் தூண்டி கலவரத்தை ஏற் படுத்த முயன்றால் நாங் கள் பன்னாட்டு அளவில் இந்தியாவின் சூழ்ச்சியை அமபலப் படுத்தவேண்டி இருக்கும் என்று நேபா ளப் பிரதமர் ஓலே கண் டனம் தெரிவித்துளார்.  மோடி முதல்ல குஜராத்தி வாடகை தாய்மாரின் பிரச்சனைகளை தீர்க்கட்டும்..வெறும் டுபாக்கூர் விளம்பரத்தால்  இனியும் காலத்தை ஓட்ட முடியாது 
பிரிட்டன் பத்திரிகைக்கு மோடி அளித்த பேட்டி
பிரிட்டனைச் சேர்ந்த பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த நேபாளப் பிரதமர் ஓலே கூறியதா வது: நாங்கள் புதிதாக கொண்டுவந்துள்ள அரசி யலமைப்புச் சட்டம் முழுக்க முழுக்க நேபாள நாட்டின் மக்களின் நன் மைக்காக அனைத்துத் தரப்பும் மக்களின் முழு சுதந்திர மனதோடு நிறை வேற்றப்பட்டுள்ளது. நேபாளத்தில் எந்த ஒரு சிக்கல் என்றாலும் நாங்கள் அதை தீர்த்துக் கொள்வோம், எங்களுக்கு அந்த சக்தியுள்ளது, நேபாளம் எப்போதும் அமைதி, ஒற்றுமை, சமூக நல்லிணக் கத்தை வலியுறுத்தும் நாடு ஆகும், இதை பன்னாட்டு சமூகம் நன்கு உணர்ந்துள் ளது.
எங்களின் அரசியல மைப்புச் சட்டம் எந்த ஒரு சமூக மக்களுக்கும் எதிரா னது அல்ல, இதை அனை வரும் ஒப்புக் கொண்டுள் ளனர்.   எங்கள் நாட்டைப்பற்றி மோடி பேசலாமா?
ஆனால், மோடி தேவை யில்லாமல் பிரிட்டன் சென்று நேபாள விவ காரம் பற்றி பேசுகிறார். இது அவருக்கும் நல்ல தல்ல, மோடி எங்கள் நாட்டு  அரசியலமைப்புப் பற்றி பிரிட்டனில் சென்று விவாதிக்கிறார். இது பன்னாட்டு விதிமுறைக்கு மீறிய செயலாகும், எங்கள் நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் பற்றி வேறு ஒரு நாட்டில் பேச மோடிக்கு எந்த அதிகாரமும் இல்லை, இதனால் இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடை யில் கவலை மற்றும் அமைதிக்குலைவு தான் நடக்கும்,மோடியின் இந்தப் பேச்சு இரு நாட்டு உறவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.  நேபாளம் எந்த ஒரு காலகட்டத்திலும் இந்தி யாவுடன் நல்லுறவையே விரும்புகிறது. எங்கள் நாட்டில் இன்றளவும் அரசியல் உறுதித்தன்மை உள்ளது. எங்கள் அரசியல் மட்டத்தில் அனைத்து அதிகாரமட்டமும் ஒற்று மையுடன் செயல்பட்டு வருகிறது.  ஆனால், இந்தியா மறைமுகமாக மாதேசி சமூக மக்களை எங்க ளுக்கு எதிராக போராடத் தூண்டி வருகிறது. மேலும் எங்களுக்குத் தேவையான பொருட்களின் வரத்தை தடை செய்து வருகிறது. நூற்றாண்டுகளாக இந்தியாவுடன் நல்லு றவை மேற்கொண்டு வரு கிறோம். ஆனால் மோடி தலைமையில் ஆன அரசு இந்த நல்லுறவிற்குத் தீங்கு இழைக்கும் வேலையைச் செய்துவருகிறது.  எல்லையில் நிலவும் அனைத்துக் குழப்பங்களுக் கும் இந்திய அரசு தான் காரணம், இதை நாங்கள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக் கத் தயாராக உள்ளோம். மருந்துப் பொருட்களைக் கூட தடுத்தி நிறுத்தி வைக்கும் மனிதாபிமான மற்ற செயலைச் செய் கிறது; இந்தியாவின் இந்தச் செயலை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கி றோம் என்று பிரிட்டன் பத்திரிக்கையாளரிடம் கூறினார்.
இந்தியாவைக் கண்டிக்கிறோம்
நேபாள நாட்டு அரசு தொலைக்காட்சியில் மக்க ளிடையே உரையாற்றிய பிரதமர் ஓலே, இந்தியா வின் மறைமுக செயலால் இந்திய எல்லைப் பகுதி யில் உள்ள முதியோர்கள், நோயாளிகள், அதிகமாக கர்ப்பவதிகள் பாதிக்கப் பட்டுள்ளனர். குழந்தைகள் கூட இந்தப் பாதிப்பில் இருந்து தப்பவில்லை, இந்தியாவின் இந்த இரக் கமற்ற செயலை நாம் அனைவரும் இணைந்து கண்டிக்க வேண்டும். நாட்டில் நிலவும் தற்காலிக பற்றாக்குறைச் சூழலை சீனாவின் உதவி யின் மூலம் எதிர்கொள்ள இருக்கிறோம். ஆகவே மக்கள் அமைதியுடன் இருக்க வேண்டும் என்று தொலைக்காட்சியில் நேபாள பிரதமர் ஓலே கூறினார்.  விடுதலை.com

கருத்துகள் இல்லை: