வியாழன், 19 நவம்பர், 2015

கொலிஜியம் முறைப்படியே நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

இது தொடர்பான வழக்குகளை விசாரித்து வந்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, கொலிஜியம் முறையை மேம்படுத்துவதற்காக நீதிபதிகளை 'நியமிக்கும் நடைமுறைகள்' குறித்த வரைவை தயாரிக்குமாறு நேற்று மத்திய அரசை கேட்டுக் கொண்டது. இந்நிலையில் இன்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டானி ஜெனரல் முகுல் ரோகத்கி, நீதிபதிகள் நியமனம் தொடர்பாக 'நியமிக்கும் நடைமுறைகள்' குறித்த எந்த வரைவையும் அரசு தயாரிக்காது என்றார். மேலும், இம்முயற்சியை கைவிட்டு விட்டு, கொலிஜியம் முறையை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை வகுக்க உச்ச நீதிமன்றம் முன்வரவேண்டும் என்றார். கொலிஜியம் முறையை மேம்படுத்துவதற்காக ஆலோசனைகள் மீதான வாதம் முடிவடைந்த நிலையில், தீர்ப்பினை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். அதுவரை, தற்போதைய கொலிஜியம் முறை மூலமே நீதிபதிகளை தேர்வு செய்யலாம் என்றும் உத்தரவிட்டனர் nakkheeran,in

கருத்துகள் இல்லை: