புதன், 30 ஜனவரி, 2013

விஸ்வரூபம்,, ஜெயலலிதாவுக்கு பயந்து வாய் மூடி இருக்கும் திரை உலகம்

விஸ்வரூபம் படம் விவகாரத்தில், வாய் மூடிக்கொண்டு பதுங்கியுள்ள திரைப்பட நட்சத்திரங்கள், இனியாவது வெளியே வந்து, குரல் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார், மூத்த பத்திரிகையாளர் ஞாநி.
இதுவரை, கமல்ஹாசனுக்காக ஒட்டுமொத்த கலையுலகில் இருந்து தெளிவாக குரல் கொடுத்தவர்கள், ரஜினிகாந்த், பார்த்திபன், மற்றும் பாரதிராஜா மட்டுமே.
அரசியல் கட்சிகளை பொறுத்தவரை தெளிவாக குரல்கொடுத்த இரு கட்சிகள், பா.ம.க., மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை. தி.மு.க. மிகக் கவனமாக கருத்து தெரிவித்திருந்தது.
இந்த விவகாரம், கமல்ஹாசன் மீது தமிழக அரசு தலைமைக்கு ஏற்பட்ட கோபம் காரணமாக நடைபெறுகிறது என்பதை புரிந்துகொண்டே, பல ‘ஆக்ஷன் ஹீரோக்கள்’ பதுங்கினார்கள் என்று சொல்லப்படுகிறது. கோடம்பாக்கம் தகவல்களில் இருந்து, இவர்கள் பதுங்கியுள்ள இடத்தில் இருந்து தாமாக தலையை தூக்க லேசில் முன்வர மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: