வியாழன், 31 ஜனவரி, 2013

பிரான்ஸிலிருந்து கடும்போக்கு இமாம்களை நாடுகடத்த திட்டம்

பிரான்ஸில் இருக்கும் கடும்போக்கு முஸ்லிம் இமாம்களை நாடுகடத்த இருப்பதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் மனிவல் வெல்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
“பெண்களை மதிக்காத, எமது கலாசாரத்திற்கு எதிரான கருத்தை கொண்டிருக்கும், பிரான்ஸ¤டனான போராட்டத்திற்கு தயாராகும் அனைத்து வெளிநாட்டு மதப் பிரசாரகர்களும் எதிர்வரும் தினங்களில் நாடு கடத்தப்படுவர்” என பிரசல்ஸில் நடைபெற்ற ஐரோப்பாவிலிருந்து தீவிரவாதத்தை முறியடிப்பது தொடர்பான மாநாட்டில் கலந்துகொண்ட பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டார்.
எனினும் நாடு கடத்தப்படவுள்ள வெளிநாட்டு முஸ்லிம் இமாம்கள் தொடர்பான தகவலை அவர் வெளியிடவில்லை. ஆனால் இவர்கள் சலபி குழுக்களைச் சேர்ந்தவர் என அவர் குறிப்பிட்டார். ஏற்கனவே பிரான்ஸிலிருந்து பல முஸ்லிம்களும் இதே குற்றச்சாட்டில் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.thinakaran.lk

கருத்துகள் இல்லை: