வியாழன், 8 செப்டம்பர், 2011

200 அடி ‌கு‌ழி‌யி‌ல் ‌விழு‌ந்த ‌சிறுவ‌ன் ‌பிணமாக ‌மீ‌ட்பு


குடிநீருக்காக போடப்பட்ட 200 அடி ஆழ்துளை கிண‌ற்‌றி‌ல் தவறி விழுந்த 5 வயது சிறுவன் 15 ம‌ணி நேர போரா‌ட்ட‌த்‌தி‌ற்கு ‌பிறகு ‌பிணமாக ‌மீ‌ட்க‌ப்ப‌ட்டா‌ன். இ‌ந்த சோக ‌நிக‌ழ்வு நெ‌ல்லை மாவ‌ட்‌ட‌ம் நா‌ங்குநே‌ரி அருகே நட‌ந்‌து‌ள்ளது.
நாங்குநேரி தாலுகா உ‌ள்ள வடக்கு விஜயநாராயணம் அருகே கைலாசநாதபுரம் என்ற ‌கிராம‌த்‌‌தி‌ல் மலையரசன் சுவாமி கோவில் கொடை விழா இன்று தொடங்க உ‌ள்ளதா‌ல் த‌ண்‌ணீ‌ர் வச‌தி செ‌ய்து தரு‌ம்படி செ‌ன்னையை சே‌ர்‌ந்த ‌ரிய‌ல் எ‌ஸ்‌டே‌ட் அ‌திப‌‌‌ரிட‌ம் பொதும‌க்க‌ள் கே‌ட்டு‌ள்ளன‌ர்.இதையடுத்து கோவில் முன்பு ஆழ்துளை கிணறு அமைக்க நேற்று முன்தினம் நள்ளிரவில் போர்வெல் போடப்பட்டது. 200 அடிக்கு மேல் தோண்டிய பின்னரும் தண்ணீர் வராததால் ஏமாற்றம் அடைந்த பொதும‌க்க‌ள், தோண்ட வேண்டாம் என்று நினைத்து போர்வெல் போடுவதை நிறுத்திவிட்டு சென்றுவிட்டனர்.
ஆனா‌ல் 200 அடி வரை தோ‌ண்ட‌ப்ப‌ட்ட ‌‌கிணறு மூடப்படாமல் அப்படியே ‌வி‌ட்டு‌வி‌ட்டு செ‌ன்று ‌வி‌ட்டன‌ர். இத‌‌னிடையே கோவிலில் பந்தல் போடப்பட்டு இருந்ததால் சிறுவர்கள் பலர் நேற்று அ‌ந்த பகு‌தி‌யி‌ல் விளையாடி கொ‌ண்டிரு‌ந்தன‌ர். அ‌ப்போது விளையாடி கொண்டு இருந்தவர்களில், சுதர்சன் என்ற 5 வயது சிறுவன் ‌கிண‌ற்‌றி‌ல் விழுந்துவிட்டான்.
இதை பா‌ர்‌த்து அங்கு விளையாடி கொண்டு இருந்த மற்ற சிறுவர்கள் ஊருக்குள் சென்று சுதர்சன் பெற்றோரையும், ஊர் மக்களையும் அழைத்து வந்தனர். வெளியில் இருந்தபடி சுதர்சனிடம் பேச்சு கொடுத்த போது கிணற்றுக்குள் இருந்து அவனது சத்தம் வெளியே கேட்டது. அவன் "காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்'' என்று சத்தம் போட்டுக் கொண்டு இருந்தான்.
உடனே ஒரு கயிற்றை போர்வெல் கிணற்றுக்குள் இறக்கி அவனிடம் கயிற்றை பிடிக்கும்படி கூறினர். சுதர்சன் கயிற்றை பிடித்ததும் மேலே தூக்கினார்கள். கொஞ்ச தூரம் மட்டுமே அவனால் மேலே வர முடிந்தது. அதன் பின்னர் கயிற்றை விட்டுவிட்டான். இதனால் மீண்டும் கிணற்றுக்குள் விழுந்து விட்டான்.
இதற்குள் தகவல் அறிந்து வடக்கு விஜயநாராயணபுரம் காவ‌ல்துறை‌யின‌ர், தீயணைக்கும் படை வீரர்கள், தெற்கு விஜயநாராயணம் ஐ.என்.எஸ். கட்டபொம்மன் கடற்படை தள வீரர்கள் ‌விரை‌ந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். 108 ஆம்புலன்ஸ் வாகனம் ஆழ்துளை கிணறு அருகே நிறுத்தப்பட்டு, அதில் இருந்து கிணற்றுக்குள் ஆக்சிஜன் வாயு செலுத்தப்பட்டது.

20
அடி ஆழத்தில் ‌‌சிறுவ‌ன் சிக்கி இருக்கலாம் என்று க‌ண்டு‌பிடி‌‌க்க‌ப்ப‌ட்டதா‌ல் உடனடியாக பொக்லைன் இயந்திரம் மூலம் போர்வெல் குழி அருகே பள்ளம் தோண்டப்பட்டது. சுமார் 7 அடி ஆழம் வரை தோண்ட‌ப்ப‌ட்ட கு‌ழி பாறை இருந்ததால், அதிகாரிகள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர். இதற்கிடையே பகல் 11 மணி வரை பேச்சு கொடுத்து கொண்டு இருந்த சிறுவன் சுதர்சனிடம் இருந்து, அதன்பின்னர் எந்த பதிலும் வரவில்லை

கருத்துகள் இல்லை: