வெள்ளி, 9 செப்டம்பர், 2011

ராஜீவுடன் கொலையான 15 பேரின் குடும்பத்தினர் உண்ணாவிரதம்!

சென்னை: ராஜீவ் கொலையாளிகள் 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று குரல் எழுப்பப்பட்டு வரும் நிலையில், ராஜீவுடன் கொலையான மேலும் 15 பேரின் குடும்பத்தினர் கலந்துகொள்ளும் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் சென்னையில் நடந்து வருகிறது. ராஜீவ் கொலையாளிகள் மூவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப் பட வேண்டும் என்று கோரி இவர்கள் உண்ணாவிரதம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

குமரி அனந்தன் உள்ளிட காங்கிரஸ் பிரமுகர்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர். ராஜீவுடன் கொலையான 15 பேரில் 6 பேரின் குடும்பத்தினர் மட்டுமே அடையாள உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: