சனி, 10 செப்டம்பர், 2011

சிறிய அறையில், கிழங்கு அடுக்கியது போல சுமார் இருபது போர் வரையில்

ltte toture campபுலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர் (13)
13. எனக்கு முன்னர் கைதுசெய்யப்பட்ட “தில்லை”யை அங்கு கண்டேன்!
நான் புலிகளின் அந்தச் சிறைச்சாலைக்கு முன்னால் இருந்த விறாந்தையில் அமர்ந்திருந்த நேரத்தில், காலையிலிருந்தே சிறையின் உள்ளேயிருந்து பல கைதிகள் வெளியே கூட்டிச் செல்லப்படுவதும், ஒரு குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் திருப்பி அழைத்து வரப்படுவதுமாக இருந்தனர். அவர்கள் எல்லோருமே ஒரே மாதிரியான சிவப்புப் பின்னணியில் புள்ளிகளிட்ட சாரத்தை அணிந்திருந்தனர். சிலரின் கால்களில் எனது கால்களிலிட்டது போன்ற இரும்புச் சங்கிலிகள் போடப்பட்டிருந்தன. அவ்வாறு போடப்பட்டிருந்தவர்கள் மிகவும் சிரமப்பட்டு தத்தித் தத்தி நடந்து சென்றனர். வேறு சிலர் கால்களில் சங்கிலிகள் எதுவுமில்லாமல் சாதாரணமாக நடந்து சென்றனர். இந்தக் கைதிகளை அழைத்துச் சென்ற புலி உறுப்பினர்கள் அனைவரும் வயதில் குறைந்த இளைஞர்களாக இருந்தனர். சிலர் நீண்ட காற்சட்டையும் இன்னும் சிலர் சாரமும் அணிந்திருந்தனர். அந்த உறுப்பினர்களுக்குக் காவலாக இரண்டு துப்பாக்கி ஏந்திய புலிகள் காவலுக்கு வந்தனர். அவர்கள் கைதிகளின் பெயர்களைச் சொல்லிக் கூப்பிடாது, ஏதோ ஒரு இலக்கத்தைச் சொல்லியே அழைத்தனர். (மேலும்

கருத்துகள் இல்லை: