சனி, 10 செப்டம்பர், 2011

இலங்கையில் நாளாந்தம் 12 பேர் தற்கொலை/ஆயிரக்கணக்கான தற்கொலை முயற்சிகள்

இலங்கையில் தற்கொலை முயற்சியால் ஒரு நாளைக்கு 12 உயிரிழப்புக்கள் நிகழ்வதாக கணிப்பீடு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
இக்கணிப்பீட்டின்படி ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான தற்கொலை முயற்சிகள் இடம்பெறுவதாக அறியப்பட்டுள்ளது.

எனினும் இலங்கையில் முன்னரைவிட தற்கொலை சம்பவங்கள் குறைந்து கொண்டு செல்வதை அவதானிக்க முடிவதாக அக்கணிப்பு தெரிவிக்கின்றது.

இலங்கையில் 15 தொடக்கம் 45 வயதிற்கு இடைப்பட்டவர்களே அதிகளவில் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

உலக தற்கொலை ஒழிப்பு தினம் இன்று அனுஷ்டிக்கப்படும் நிலையில் தற்கொலை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டங்கள் பல நாடலாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கருத்துகள் இல்லை: