வெள்ளி, 9 செப்டம்பர், 2011

யாழ் மாநகரசபையில் எதிர்க்கட்சிக்குள் குத்து வெட்டு!எதிர்க்கட்சி தலைவரின் கருத்துக்கு அவரது கட்சியினரே எதிர்ப்பு!

யாழ் மாநகரசபையில் இன்றைய தினம் எதிர்க்கட்சி தலைவர் முடியப்பு றெமீடியஸ் அவர்களால் பிரேரணை ஒன்று கொண்டு வரப்பட்டது. கீறீஸ் பூத விவகாரம் குறித்து பொது மக்கள் அனுபவித்து வரும் அசௌகரியங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இன்றைய தினம் சபையை பகிஸ்கரிக்க வேண்டும் என றொமீடியஸ் அவர்கள் தெவித்திருந்தார்.
இது குறித்து அங்கு கருத்து தெரிவித்திருந்த றொமீடியஸ் அவர்கள் சார்ந்த எதிர்க்கட்சியினரும், மற்றும் ஆளும் தரப்பு அணியினரும் கருத்து தெரிவிக்கையில் ஏற்கனவே .இது குறித்து மாநகரசபை கண்டனத்தீர்மானம் நிறைவேற்றியிருந்ததாகவும், இதை ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பேதமின்றி ஏகமனதாக அனைவரும் ஏற்றுக்கொண்டு கண்டனத்தை தெரிவித்திருந்தனர் என்றும், ஆகவே இது குறித்த சபை பகிஸ்கரிப்பு தற்போதைக்கு தேவையற்றது என்றும் தெரிவித்திருந்தனர்.

கருத்துகள் இல்லை: