சனி, 10 செப்டம்பர், 2011

கவிஞர் வைரமுத்து ,ஆதாயம் அடைந்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில்

கவிஞர் வைரமுத்து படத்தைச் சொல்கிறாயா? அவர் அரசியலில் இல்லை என்றாலும், கடந்த ஆட்சியில் அதிக ஆதாயம் அடைந்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இ ருக்கிறாராம்...’’ ‘‘எப்படி?’’ ‘‘அவருக்கும் முன்னாள் முதல்வருக்கும் இருந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி, அரசு சார்பில் வரும் பிரிண்டிங் ஆர்டர்கள், விளம்பரங்கள் என பலவற்றை தனது நிறுவனம் மூலம் செய்திருக்கிறார். அந்த நிறுவனத்துக்காக எப்படியெல்லாம் சட்டம் வளைந்து கொடுத்துள்ளது என்ற விவரமும் சேகரிக்கப்பட்டுள்ளதாம். இவர் மீதும் வழக்குப் பாய வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள். அதேபோல தி.மு.க. மகளிரணி பெண் பிரமுகர் பால்மலர் கொலை வழக்கு ஸ்டாலினுக்கு சிக்கலை உருவாக்கலாம் என்கிறார்கள்.’’ ‘‘மாஜி மந்திரிகள் சரி... அவர்களின் வாரிசுகளும் சிக்கிக் கொண்டு வருகிறார்களே...’’ ‘‘என்ன செய்வது... ஆட்சியில் இருக்கும் போது போட்ட ஆட்டம்! இப்போது அனுபவிக்கிறார்கள். இது தவிர இன்னும் 60-க்கும் மேற்பட்டவர்களின் பட்டியல் முதல்வர் கையில் இருக்கிறதாம். உரிய ஆவணங்களுடன் இருந்தாலும், அதனை அலசி ஆராய்ந்து பார்த்த பின்னரே வழக்குப் போட முதல்வர் அனுமதி கொடுக்கிறாராம்...’’ thanks kumudam+arasu NY

கருத்துகள் இல்லை: