வெள்ளி, 9 செப்டம்பர், 2011

யாழ் மர்மமாய் மறைந்து போயுள்ள மர்ம மனிதர்கள்!

யாழ்ப்பாணத்தை அண்மைக் காலமாக கலக்கி வந்த கிறீஸ் பூதம் எனும் மர்ம மனிதன் தொடர்பாக முறைப்பாடுகள் எதுவும் இன்று வெள்ளிக்கிழமை கிடைக்கப் பெறவில்லை என யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரு வாரங்களாக யாழ்.குடாநாட்டில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையை அடுத்து அதற்குத் தீர்வு காணும் முகமாக யாழில் தொடர்ச்சியாக கூட்டப்படும் கூட்டங்களினால் கிறீஸ் மனிதனின் நடவடிக்கைகள் தற்சமயம் குறைவடைந்துள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்தனர்.

இது இவ்வாறிருக்க கூட்டங்கள் முடிவடைந்த நிலையில் இதுவரையில் ஊடகங்களுக்கோ, பொலிஸாருக்கோ அல்லது படையினருக்கோ கிறீஸ் பூதம் தொடர்பான எவ்விதமான முறைப்பாடுகளும் கிடைக்கப் பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை: