சனி, 13 நவம்பர், 2010

Srilanka. காதலியின் நிர்வாண புகைப்படங்களை பேஸ்புக் கில் பதிவேற்றம் செய்த காதலனுக்கு சிறைத் தண்டனை!


தனது காதலியின் நிர்வாண புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த நபருக்கு குளியாபிட்டிய நீதவான் நீதிமன்றம் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.கிரியுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

உயர் தரத்தில் கல்வி கற்கும் தனது காதலிக்கும் தனக்கும் ஏற்பட்ட பிரச்சினையடுத்து தான் இச்செயலை செய்ததாக குறித்த நபர் நீதிமன்ற விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.குறித்த நபர் தொடர்பான விசாரணைகளை குளியாபிட்டிய பொலிஸாரும், கொழும்பு சிறுவர் மற்றும் மகளிர் அதிகாரசபையும் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: