சனி, 13 நவம்பர், 2010

தெற்காசியாவில் அதிகளவு நீரிழிவு நோயாளிகளைக் கொண்ட நாடாக இலங்கை

தெற்காசியாவில் அதிகளவு நிரிழிவு நோயாளர்களைக் கொண்ட நாடாக இலங்கைத் திகழ்வதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்காசிய பிராந்திய வலய நாடுகளில் இலங்கையில் அதிகளவு நீரிழிவு நோயாளர்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
20 -79 வயதுப் பிரிவினை உடையவர்களிடையே அதிகளவான மக்கள் நீரிழிவு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய நாடுகளை விடவும் அதிகளவான நோயாளிகள் இலங்கையில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
புகைப்பிடித்தல், மன உலைச்சல், பிழையான உணவுப் பழக்க வழக்கம், மதுபானம் அருந்துதல் ஆகியவற்றினால் அதிகளவு நிரிழிவு நோயாளர்கள் உருவாவவதாக சுகாதார அமைச்சின் சிரேஸ்ட மருத்துவர் டொக்டர் பிரசாத் படுலந்த தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நபர் ஒருவர் பத்து கிராம் உப்பையும், 60 கிராம் சீனியையும், 15 – 20 வீதமான கொழுப்பு அடங்கிய உணவுகளையும் சராசரியாக உட்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: