புதன், 10 நவம்பர், 2010

ராஜபக்சே மைத்துனர் பாபநாசம் கோயிலில் விசேஷ பூஜை: பலத்த பாதுகாப்பு

வி.கே.புரம்: ராஜபக்சேவின் மைத்துனர் திருக்குமரன் நடேசன், நேற்று பாபநாசத்தில் உள்ள சிவன் கோவில், முருகன் கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்.

ராஜபக்சேவின் தங்கை நிருபமா எம்பியாக உள்ளார். இவரது கணவர் திருக்குமரன் நடேசன். இவர் நேற்று நெல்லை மாவட்டம் பாபநாசம் வந்தார். அங்கு அகஸ்தியர் அருவியில் குளித்து விட்டு சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அகஸ்தியர் அருவிக் கரையோரம் உள்ள முருகன் கோயிலில் நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

கந்த சஷ்டி விழாவுக்காக திருச்செந்தூர் வந்துள்ளேன். அங்கு வரும்போதெல்லாம் பாபநாசம் கோயிலில் வழிபடுவது வழக்கம். தற்போது 26 வருடமாக இங்கு வந்துள்ளேன். எனக்கு அரசியல் [^] தெரியாது. எனது மனைவி தான் அரசியலில் உள்ளார் என்றார்.

திருக்குமரன் நடேசனுடன் இலங்கை அமைச்சர் [^] ஆறுமுகதொண்டைமானின் உதவியாளர் மணிமுத்து, முன்னாள் எம்.பி. மகேஸ்வரனின் தம்பி விக்னேஸ்வரன் உள்பட 25 பேர் வந்திருந்தனர்.

அம்பை டி.எஸ்.பி. முத்துராமலிங்கம் தலைமையில் வி.கே.புரம் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் பலத்த பாதுகாப்பு [^] ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை: