சனி, 13 நவம்பர், 2010

ஆயிரக்கணக்கான புதிய குடியிருப்புகள் நாட்டுடைமை: வெனிசுலாவில் ஊழல்வாதிகளுக்கு பலத்த அடி


பெரும் மோசடிகளை செய்து வந்த தனியார் ரியல் எஸ்டேட்காரர்களிடமிருந்து ஆயிரக்கணக்கான குடியி ருப்புகளைப் பறித்து அவற்றை தேசிய மயமாக்கி யதோடு, அவற்றை மக்க ளுக்கு விநியோகிக்க மூன்று கட்டத் திட்டத்தையும் வெனி சுலா அரசு அறிவித்துள்ளது. அரசின் திட்டத்தை வெளியிட்டு செய்தியாளர் களிடம் துணை ஜனாதிபதி பேசினார். அப்போது அவர், இந்தக் குடியிருப்பு களைக் கட்டி வரும் தனி யார் நிறுவனங்கள் பெரும் மோசடியைச் செய்துள் ளன. மீண்டும் ஒருமுறை அவர்கள் ஏமாந்துவிடாத வாறு பார்த்துக் கொள் ளவே நாட்டுடைமையாக் கியுள்ளோம் என்றார்.

முதல் கட்டமாக, ஏற் கெனவே குடியேறியவர் களுக்கு அந்தந்த வீடுகளை சட்டபூர்வமாகத் தருவது, அதற்கான பத்திரங்களைப் பதிவு செய்து அவர்களிடம் வழங்குவது என்று அரசு முடிவெடுத்திருக்கிறது. கட் டப்பட்டு யாரும் குடியே றாத நிலையில் சுமார் 460 வீடுகள் உள்ளன. அந்த வீடு களையும் வீடில்லாதவர் களுக்கு வழங்கப்போகிறார் கள்.

இரண்டாவது கட்ட மாக, பாதி முடிந்த நிலை யில் தனியார் நிறுவனங் களால் விடப்பட்டிருக்கும் வீடுகளை அரசின் சிறப்பு நிதியின் மூலம் கட்டி முடிக் கப் போகிறார்கள். மூன்றா வது கட்டமாக, தனியார் நிறுவனங்களின் வசம் வீடு களை கட்டுவதற்காக இருந்த நிலங்களில் புதிய வீடுகளைக் கட்டி வீடில் லாதவர்களுக்கு வழங்குவது என்று வெனிசுலா அரசு திட்டமிட்டுள்ளது. இந்த பணிகளுக்காக சுமார் 7 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கான அனுமதியை ஜனாதிபதி சாவேஸ் வழங் கியுள்ளார்.

2011 ஆம் ஆண்டில் கட் டப்படும் குடியிருப்பு களுக்கு பொதுத்துறை வங் கியான பேங்க் ஆப் வெனி சுலா கடன் வழங்கப் போகி றது. இந்தப் பணிகள் ஒருபுற மிருக்க, மோசடி செய்த தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அரசு திட்டமிட்டுள்ளது. கொள் ளைக்காரர்களாக அவர்கள் மாறிவிட்டார்கள் என்று வீடுகளில் குடியேறியவர் கள் அரசிடம் புகார் தந்தி ருந்தனர்.

சட்டவிரோதமான கட் டணம், விலைகளில் ஊக வணிகம், வீடுகளை ஒப்ப டைப்பதில் தாமதம், பணத்தை வாங்கிக்கொண்டு வீடுகளையே கட்டாமல் இருப்பது என்று பல தில்லு முல்லுகளை இந்த தனியார் நிறுவனங்கள் செய்து வந் தன. இவற்றிற்கு
அரசின் நட வடிக்கை முற்றுப்புள்ளி வைக்கும் என்று வீடுகளில் குடியேறியிருப்பவர்களும், வீடுகளுக்காகக் காத்திருப் பவர்களும் தெரிவித்துள் ளனர்.

கருத்துகள் இல்லை: