வியாழன், 11 நவம்பர், 2010

யாழ். வைத்தியசாலையில் எயிட்ஸ் நோய் உள்ள பெண் ஒருவரை கண்டுபிடிப்பு



யாழ். போதனா வைத்தியசாலையில் மற்றுமொரு எயிட்ஸ் தொற்றுக்குள்ளான பெண் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார். 20 வயதான இந்த யுவதி தனக்கு எவ்வாறு இந்த எயிட்ஸ் தொற்று ஏற்பட்டது என்பது குறித்து எதுவுமே கூற மறுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளையில் அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட வேளையிலேயே இவர் எயிட்ஸ் நோய்த் தொற்றுக்குள்ளாகியிருந்தமை தெரிய வந்துள்ளது.
சுமார் 4 வருடங்களுக்கு முன்னர் அதாவது 16 வயதளவில் இவர் எயிட்ஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. நீண்ட இடைவேளையின் பின் யாழ் போதனா வைத்தியசாலையில் மற்றுமொரு புதிய எயிட்ஸ் நோயாளி கண்டுபிடிக்கப்பட்டமை வைத்தியசாலை வட்டாரங்களில் மிகவும் அவதானமான சூழலை ஏற்படுத்தியிருக்கின்றது.

கருத்துகள் இல்லை: