சனி, 13 நவம்பர், 2010

இலங்கை நீதிபதிகளுக்கு இந்தியாவில் பயிற்சி


கொழும்பு : இலங்கை நீதிபதிகளுக்கு இந்தியாவில் சட்ட நுணுக்கங்கள் பற்றி பயிற்சி அளிப்பதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது. இலங்கை சட்டத்துறை அமைச்சர் சென்விரத்னேவும், இலங்கைக்கான இந்திய தூதர் அசோக் கே காந்தாவும் நேற்று முன்தினம் கொழும்பில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்புக்கு பின் இலங்கை சட்ட அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கை நீதிபதிகளுக்கு இந்தியாவில் சட்ட நுணுக்கங்கள் பற்றி பயிற்சி அளிப்பது குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக விரைவில் இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. அதன்பின் இலங்கை நீதிபதிகள் பெங்களூரு மற்றும் போபால் நகரங்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கு சட்ட நுணுக்கங்கள் குறித்து பெறுவர். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தவரை இந்தியா, இலங்கை இடையே சட்ட நுணுக்கங்களை பகிர்ந்து கொள்ளும் வழக்கம் நடைமுறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: