செவ்வாய், 27 ஜூலை, 2010

தீக்குளித்தவர் இன்று காலை மரணமானார்.UNP தலைமையகத்தின் முன்னால்

கொழும்பின் புறநகர் பிட்டகோட்டேயில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியின் சிறீகோத்தா தலைமையகத்தின் முன்னால் தீக்குளித்தவர் இன்று காலை மரணமானார்.
நேற்று மாலை 5.10 அளவில் இடம்பெற்ற சம்பவத்தில் பலத்த எரிகாயங்களுக்கு உள்ளான அவர் முதலில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரின் உடலின் 90 சதவீதமான பாகம் எரிகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் பின்னர், வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில் அவர் களுபோவில வைத்தியசாலையிலிருந்து பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தும், இன்று காலை சிசிக்சை பலனின்றி மரணமானார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை களையக் கோரியே ரியன்ஸி அல்கம என்ற இந்த கட்சி ஆதரவாளர் தீக்குளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள

கருத்துகள் இல்லை: