சனி, 31 ஜூலை, 2010

டும் டும் டும் படத்தின்் படப்பிடிப்பு தஞ்சை பெ‌ரிய கோவிலில்

தஞ்சை பெ‌ரிய கோவில் சந்தேகமில்லாமல் உலக அதிசயங்களில் ஒன்று. பாடல் காட்சி எடுக்க தேசம் தேசமாகப் பறக்கிறவர்கள் இந்த அற்புத‌க் கோயிலை திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை. அதற்கு காரணம் உண்டு.

தஞ்சை பெ‌ரிய கோயிலில் எடுக்கப்படும் எந்தப் படமும் இதுவரை வெற்றி பெற்றதில்லையாம். சினிமாவில் கதையைவிட சென்டிமெண்டை அதிகம் எதிர்பார்க்கும் நமது ஆட்கள் அப்புறம் ஏன் பெ‌‌ரிய கோயிலை திரும்பிப் பார்க்கப் போகிறார்கள்?

இந்த சென்டிமெண்டை உடைத்து தனது டும் டும் டும் படத்தின் பாடல் காட்டியொன்றை பெ‌ரிய கோயிலில் படமாக்கினார் மணிரத்னம். இந்தப் படத்தை அழகம் பெருமாள் இயக்கியிருந்தாலும் தயா‌ரித்தவர் மணிரத்னம்.

டும் டும் டும் ஹிட். என்றாலும் சென்டிமெண்ட் பயத்தில் யாரும் அந்தப் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை.

இந்நிலையில் சாந்தனு நடிக்கும் புதிய படம் கண்டேனின் பாடல் காட்சியை பெ‌ரிய கோயிலில் படமாக்கியிருக்கிறார்கள். இந்த துணிச்சலுக்காவது கண்டேன் கன்னா பின்னாவென்று ஓட வேண்டும்.

கருத்துகள் இல்லை: