சனி, 31 ஜூலை, 2010

அம்பாறை, தாயை கொலை செய்த மகனுக்கு 15 வருட கடூழிய

தாயை கொலை செய்த மகனுக்கு 15 வருட கடூழிய சிறைத் தண்டனையை வழங்கி அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதி மொஹான் செனவிரட்ன தீர்ப்பளித்தார்.
அம்பாறை ஹிங்குராண சமகிபுரயைச் சேர்ந்த ரணவாகே சிரில் என்பவர்  2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்  தமன பொலிஸ் பிரதேசத்தில் வசித்து வந்த  தனது தாயை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டார்.
இது தொடர்பிலான வழக்கு அண்மையில் அம்பாறை மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டபோது,  சந்தேக நபருக்கு நீதிபதி 15 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கியதுடன் 1500 ரூபா தண்டப்பணத்தையும் செலுத்த உத்தரவிட்டார்.
தண்டப் பணம் செலுத்த தவரும் பட்சத்தில் மேலும் ஆறு மாத காலம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டிவரும் எனவும் நீதிபதி அறிவித்தார்.
www.tamil.daillymirror.lk

கருத்துகள் இல்லை: