செவ்வாய், 27 ஜூலை, 2010

அபராதம் மலிபன் மில்க்் தனியார் நிறுவனத்திற்கு அநுராதபுரம நீதவான்

முன்னிலை பாலுணவு உற்பத்தி நிறுவனமான மலிபன் மில்க் புரடக்ட் தனியார் நிறுவனத்திற்கு அநுராதபுரம் மேலதிக நீதவான் சந்திமா எதிரிமன்ன இன்று 7500 ரூபா அபராதம் விதித்தார்.அந்நிறுவனம் தனது தயாரிப்புகளில் ஒன்றில் சில விசேட தன்மைகள் இருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் முறையான அனுமதியின்றி விளம்பரப்படுத்தியமையே இதற்குக் காரணம்.
 இவ்வழக்கில் 8 ஆவது பிரதிவாதியான திருகோணமலையைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் ஒருவரை நவம்பர் 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.
மிஹிந்தலை பொதுச் சுகாதார அலுவலகத்தைச் சேர்ந்த பொதுச்சுகாதார பரிசோதகர் பிரகீத் ஜாலிய ஜயதிலகவினால் அநுராதபுரம் நீதிவான் நீதிமன்றில் இவ்வழக்குத் தொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
www.tamil.daillymirror.lk

கருத்துகள் இல்லை: