சனி, 31 ஜூலை, 2010

எம்.வி சன் சீ கப்பலை இடைமறிப்பதற்கு காத்திருக்கும் கனடா: பாதுகாப்பு அமைச்சு தகவல்

சுமார் 200 இலங்கையர்கள் இருப்பதாக கூறப்படும் எம்.வி சன் சீ கப்பலை இடைமறிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கனடாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.<> இந்த கப்பல் அடுத்த வாரமளவில் கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியா துறைமுகத்தை வந்தடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கப்பல் சர்வதேச கடற்பரப்பில் பயணிப்பதை தமது கடற்படையினர் அவதானித்துள்ளதாக கனேடிய பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் மெக்கே தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் குறித்த கப்பல் கனேடிய கடற்பரப்புக்குள் பிரவேசிக்கும் போது அதனை தடுத்து நிறுத்த தமது கப்பல்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கப்பலில் பயணிப்போரின் உடல்நிலையை கவனிப்பதற்கான ஒழுங்குகளையும் தமது அரசாங்கம் செய்திருப்பதாக மெக்கே தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை: