சனி, 31 ஜூலை, 2010

UNPயுடன மங்கள சமரவீரவுடன், கட்சியின் ஏனைய உறுப்பினர்களும் இணைந்து கொள்ளவிருப்பதாக

நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மக்கள் பிரிவு எதிர்வரும் வாரமளவில் கலைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கட்சி, எதிர்வரும் வாரம் நடைபெறவுள்ள கட்சியின் செயற்குழு கூட்டத்தின் போது மேற்கொள்ளவுள்ள தீர்மானத்தின் அடிப்படையில், கலைக்கப்படும என அரசியல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவை தமது கட்சியுடன் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
இதன் அடிப்படையில் கட்சி கலைக்கப்பட்டதன் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவுடன், கட்சியின் ஏனைய உறுப்பினர்களும் ஐக்கிய தேசிய கட்சியுடன் உத்தியோகபூர்வமாக இணைந்து கொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: