சனி, 31 ஜூலை, 2010

அரியவகை தாவரங்களை வைத்திருந்த அயர்லாந்து பிரஜைகள் உட்பட மூவர் கைது

இலங்கையின் அரிய வகை தாவரங்களை சேகரித்தமைக்காக அயர்லாந்து மற்றும் இலங்கை பிரஜைகளுக்கு இரண்டு இலட்சத்து 30 ஆயிரம் ரூபா அபராதம் விதித்து நுவரெலியா மாவட்ட நீதவான் சமன் ஜீ.காரியவசம் நேற்று விடுதலை செய்தார்.

அயர்லாந்து பிரஜைகளான 45 வயதுடைய ஆணொருவரும் 35 வயதுடைய பெண்ணொருவரும் இலங்கை பிரஜையான 23 வயதுடைய மாவனல்ல இளைஞர் ஒருவரும் கடந்த 27ம் திகதி நுவரெலியா அம்பேவெல உலக முடிவு காட்டுப் பகுதியில் வைத்து வன இலாகா தலைமை பொறுப்புதிகாரி ஜீ.யு.சாரங்க தலைமையிலான குழுவினரால் கைது செய்யப்பட்டனர். இவர்களை கைது செய்யும் போது இவர்கள் வசம் பல்வேறு வகையான அரிய தாவரங்கள் இருந்துள்ளன.

மூவரையும் 28ம் திகதி காலை நுவரெலியா மாவட்ட நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தியபோது 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை: