சனி, 31 ஜூலை, 2010

யதார்த்த கதைகளுக்கு ரசிகர்கள் வரவேற்பு - இயக்குனர் ஏ. வெங்கடேஷ்

விஜய் நடித்த “பகவதி”, சரத்குமார் நடித்த “ஏய்”, “சாணக்யா”, “மகாபிரபு”, சிம்புவின் “குத்து”, “தம்” மற்றும் “மலை மலை”, “மாஞ்சாவேலு”, “வாத்தியார்”, “துரை”, “சாக்லெட்”, உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் ஏ. வெங்கடேஷ். “அங்காடி தெரு” படத்தில் வில்லனாக நடித்துள்ளார். தற்போது அர்ஜூன் நடிக்கும் “வல்லக் கோட்டை” படத்தை இயக்கி வரும் வெங்கடேஷ் அளித்த பேட்டி வருமாறு:-
 
ரசிகர்கள் யதார்த்த கதைகளை விரும்புகின்றனர். தொப்பிள் காட்டுவது, குளியல் சீன்களை ரசிப்பதில்லை. இது போன்ற காட்சிகள் கொஞ்சம் 
கொஞ்சமாய் மறைகின்றன.
 
“அங்காடி தெரு”, “பருத்தி வீரன்”, “களவாணி” போன்ற யதார்த்த கதைகளை வரவேற்கிறார்கள். ஆனாலும் இதுபோன்ற படங்களை எடுக்க தயாரிப்பாளர்கள் முன் வருவதில்லை. கமர்ஷியல் படங்களை எடுக்கவே ஆர்வப்படுகின்றனர்.

பருத்தி வீரன், அங்காடி தெரு படங்களுக்கு இடையில் அதே போன்ற சாயலில் நாற்பது படங்கள் வந்து இருக்கும். அவை எல்லாமே தோற்றன. எனவே தயாரிப்பாளர்கள் கமர்ஷியல் படங்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். வில்லன் ரசனைகளும் மாறுகிறது. அங்காடி தெருவில் எனது கருங்காலி வில்லன் கேரக்டரையும், களவாணி பட வில்லனையும் விரும்பு கின்றனர்.
 
ரீமிக்ஸ் பாடலுக்கு ரூ.2 1/2லட்சம் செலவாகிறது. நேரடி பாடலை விட ரீமிக்ஸ் செலவு அதிகம். எனவே ரீமிக்ஸ் கலாச்சாரம் போய் விட்டது.
 
இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: