சனி, 31 ஜூலை, 2010

புலிகளின் மனைவிமாருக்கு மாத்திரமின்றி அவர்களினால் கொல்லப்பட்டவர்களின் மனைவியருக்கும் நிவாரணம்

விடுதலைப் புலிகளின் மனைவிமாருக்கு மாத்திரமின்றி அவர்களினால் கொல்லப்பட்டவர்களின் மனைவியருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் - சித்தார்த்தன்
புனர்வாழ்வளிக்கப்பட்டு நிவாரணங்களை வழங்க வேண்டியது பாலகுமார் மற்றும் திலகர் ஆகியோர் விதவை மனைவிகளுக்கு மாத்திரமல்ல எனவும் விடுதலைப்புலிகளினால் கொலை செய்யப்பட்ட தமது உறுப்பினர்களின் விதவை மனைவிமாருக்கும் நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டியூ.குணசேகரவிடம் சுட்டிக்காட்டியுள்ளார். 20 முதல் 30 வருடங்களாக பாதிப்புகளுக்கும் கொலைகளுக்கும் உள்ளான தமது அமைப்பின் உறுப்பினர்களின் விதவை மனைவிமார் பிள்ளைகள் தொடர்பில் அரசாங்கத்தின் அதிகாரிகள் எவரும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் சித்தார்த்தன் கூறியுள்ளார்.  கடந்த காலங்களில் அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்ட கே.பி போன்றவர்களையே ராஜபக்~ அரசாங்கம் மடியில் வைத்து அன்பு பாராட்டி வருவதாகவும் புலிகளின் வன்முறைகளுக்கு அஞ்சாது செயற்பட்ட தமது உறுப்பினர்களையும் அவர்ளது விதவை மனைவிமார்களையும் பிள்ளைகளையும் ராஜபக்~ அரசாங்கம் முற்றாக மறந்து போயுள்ளது எனவும் சித்தார்தன் கூறியுள்ளார். 

கருத்துகள் இல்லை: