புதன், 26 மே, 2010

நல்லூர் திலீபனின் உருவச்சிலை... பழி தம்மீது சுமத்தப்பட்டதாகவும் டக்ளஸ் தேவானந்தா கூறினார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பெயரைப் பயன்படுத்தி சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வேலணையில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு கூறினார்.
யாழ். நல்லூர் வீதியில் அமைக்கப்பட்டிருந்த திலீபனின் உருவச்சிலை கொழும்பிலிருந்து வந்த குண்டர்கள் மூலம் சில அரசியல்வாதிகளால் சேதமாக்கப்பட்டதாகவும், பின்னர் அந்தப் பழி தம்மீது சுமத்தப்பட்டதாகவும் டக்ளஸ் தேவானந்தா கூறினார்.
அங்கு மேலும் உரையாற்றிய அமைச்சர், தீவகம் வேலணை மக்கள் சார்பில் தன்னிடம் முன்வைக்கப்பட்டிருக்கும் கோரிக்கைகள் நிறைவேற்ற்றப்படும் எனவும் குறிப்பிட்டார்.
மக்களுக்கு சேவையாற்றுவதையே தாம் கொள்கையாகக் கொண்டு செயற்பட்டு வருகையில், தமது கட்சி மீது பலர் திட்டமிட்ட வகையில் சேறு பூசுவதாகவும் அவர் கூறினார்

கருத்துகள் இல்லை: