சனி, 29 மே, 2010

தீண்டாமை ஒழிப்பு பேரணி: 50 ஆயிரம் பேர் பங்கேற்றனர்

புதுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று மற்றும் இன்றும் தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடைபெறுகிறது.
தொடக்க நாளான நேற்று மாநாட்டு திடலில் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட தியாகிகளின் சுடர்களை பெற்றுக் கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது.

ஜெர்மனி தியாகிகளின் சுடரை அனைத்திந்திய விவசாய சங்க பொதுச்செயலாளர் கே. வரதராஜன் பெற்றுக்கொண்டார். திருப்பூர் ரத்தினசாமியின் சுடரை மத்தியக் குழு உறுப்பினர் வரதராஜன் பெற்றுக்கொண்டார். தியாகி மேலவளவு முருகேசன் சுடரை குடியாத்தம் எம்எல்ஏ லதா பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து பிரதிநிதிகளின் மாநாடு கே.வரதராஜன் தலைமையில் நடந்தது. மாநாட்டில் தீண்டாமை ஒழிப்பு கவியரங்கம், தீண்டாமை ஒழிப்பு நாடகம் போன்ற கலை இரவு நடந்து கொண்டிருக்கிறது.
இன்று மாலை 5  மணிக்கு திலகர் திடலில் இருந்து பேரணி துவங்கியது.   இப்பேரணியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இன்னும் சற்று நேரத்தில்  மணிக்கு பிரகாஷ் காரத் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் சின்னப்பா பூங்காவில் நடைபெறுகிறது.

கருத்துகள் இல்லை: