வெள்ளி, 28 மே, 2010

கைது புலிகளின் பாடல் ஒன்றை பதிவு செய்து வைத்திருந்த

கல்முனை பாண்டிருப்பில் கையடக்கத் தொலைபேசியில் விடுதலைப் புலிகளின் பாடல் ஒன்றை பதிவுசெய்து வைத்திருந்த இளைஞர் ஒருவர் புதன்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார். பாண்டிருப்பு பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினர் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, கூட்டமாக நின்ற இளைஞர் குழுவினரையும் அவர்களிடம் இருந்த கையடக்கத் தொலைபேசிகளையும் பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.
அவ்வேளை, விடுதலைப் புலிகளின் பாடல் ஒன்றை பதிவு செய்து வைத்திருந்த பாண்டிருப்பு மாரியம்மன் ஆலய வீதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைதுசெயது கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

கருத்துகள் இல்லை: