செவ்வாய், 25 மே, 2010

சுப்பிரமணிய சாமி எதிர்ப்பு! வைகோவுக்கு ராஜ்யசபா 'சீட்'

மதுரை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு ராஜ்யசபா எம்பி சீட் வழங்கக் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணி சார்பில் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிடம் வைகோவும், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாணடியனும் சீட் கேட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந் நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய சாமி,

எலக்ட்ரானிக் ஓட்டுப் பதிவு எந்திரத்தில் மோசடி நடைபெற அதிக வாய்ப்புள்ளது. மோசடி நடக்காது என்று டெல்லி ஐகோர்ட்டில் மத்திய தேர்தல் கமிஷன் உறுதிபடக் கூறவில்லை.

எனவே, எலக்ட்ரானிக் ஓட்டுப் பதிவு எந்திரத்துக்கு தடை விதிக்க வேண்டும் அல்லது பணம் எடுக்கும்போது வங்கி ஏ.டி.எம்மில் ரசீது கிடைப்பது போல், ஓட்டளித்ததும் அதன் முழு விவரம் அடங்கிய ஆவணம் கிடைக்கச் செய்ய வேண்டும்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பெயர், படத்தை பயன்படுத்த தமிழகத்தில் அரசு தடை விதிக்க வேண்டும்.

அதிமுக சார்பில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிற்கு ராஜ்யசபா எம்.பி சீட் வழங்கக் கூடாது.

இந்து தர்ம ஆச்சார்ய சபா தலைவராக உள்ள தயானந்த சரஸ்வதி சார்பில் எனது தலைமையில் 300 வக்கீல்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது என்றார்.

பதிவு செய்தவர்: irvanan
பதிவு செய்தது: 25 May 2010 8:25 pm
டேய் சுவாமி , உனக்கு அடுத்த முறை முட்டேய் எறியமடோம்,  தான் எறிவோம்

பதிவு செய்தவர்: malai malai
பதிவு செய்தது: 25 May 2010 8:15 pm
he spoiled chandralekha's life.wht he wants now???

கருத்துகள் இல்லை: