வியாழன், 27 மே, 2010

பொ.பியசேன வேண்டுகோள் 2006 முதல் காணாமல் போனோர் மற்றும் கடத்தப்பபட்டோர் பற்றிய விபரங்களைத்

இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் 2006 முதல் காணாமல் போனோர் மற்றும் கடத்தப்பபட்டோர் பற்றிய விபரங்களைத் தருமாறு அம்பாறை மாவட்ட தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பொ.பியசேன வேண்டுகோள் விடுத்துள்ளார். தினமும் பல நூற்றுக்கணக்கான தாய்மார்கள் கண்ணீர்மல்க வந்து கடத்தப்பட்ட மற்றும் காணாமல் போன தமது பிள்ளைகளை மீட்டுத் தருமாறு தன்னிடம் முறையிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே எதிர்வரும் 15.06.2010 க்கு முன்னர் தமக்கு அறியத் தந்தால் தேடவோ அல்லது நஸ்டஈடு பெறவோ முடியுமென கூறுகிறார்.
அம்பாறை மாவட்டத்தில் இராணுவத்தோடு சேர்ந்து இயங்கும் துணை இராணுவக்குழுக்கள் அவர்களின் நடமாட்டங்கள் அதிகமாக உள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: