வெள்ளி, 28 மே, 2010

, கொளத்தூர் மணி ,வைகோ-நெடுமாறன் கைதுகேரள சாலைகளை மறித்து மதிமுகவினர் போராட்டம்


கோவை & செங்கோட்டை: நதி நீர் பிரச்சனை தொடர்பாக கேரள அரசைக் கண்டித்து கேரள எல்லையில் மறியல் செய்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உள்பட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

முல்லைப் பெரியாறு, பாம்பாறு, செண்பகவல்லி தடுப்பு அணை, நெய்யாறு இடதுகரைச் சானல் ஆகிய நதி நீர் பிரச்னைகளில், தமிழகத்தின் உரிமைகளுக்கு கேரளம் பங்கம் விளைவிப்பதாகக் கூறி கோவை மாவட்டம் கந்தேகவுண்டன் சாவடியில் கேரளத்துக்கு செல்லும் சாலையில் வைகோ தலைமையில் இன்று மறியல் போராட்டம் நடந்தது.

இதில் மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்ளிட் 3,000 பேர் கலந்து கொண்டனர். இதையடுத்து, மறியல் செய்ய முயன்ற அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல, வேலந்தாவலத்தில் இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட 500 பேரும், ஆனைக்கட்டியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்ட 340 பேரும், பொள்ளாச்சி கோபாலபுரத்தில் கொங்கு இளைஞர் பேரவை அமைப்பாளர் உ. தனியரசு உள்ளிட்ட 750 பேரும், வலந்தாயமரத்தில் தமிழ் தேசப் பொதுவுடமை இயக்கத் தலைவர் தியாகு உள்ளிட்ட 150 பேரும், நடுப்புணியில் மதிமுக விவசாயி அணித் தலைவர் சூலூர் பொன்னுசாமி மற்றும் உடுமலை 9-6 சோதனைச் சாவடியில் ஈரோடு மக்களவை உறுப்பினர் அ.கணேச மூர்த்தி உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.

செங்கோட்டையில் வீரவாஞ்சிநாதன் சிலை முன்பு நெல்லை மாநகர், புறநகர், விருதுநகர் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த மதிமுகவினர் மறியல் போராட்டம் நடத்தினர்.

இங்கு மறிப்பில் ஈடுபட்ட மதிமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத், எம்எல்ஏ சதன் திருமலைக்குமார், முன்னாள் எம்பி் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் உள்பட ஏராளமான மதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

இப்போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், கொளத்தூர் மணி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து நேற்று இரவு முதல் கேரளா மாநில வாகனங்கள் அத்திவாசிய பொருட்களை விடிய விடிய ஏற்றி சென்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: